வசந்ததீபன்
____________________________________________
காப்பிப் பூக்கள்
பூத்திருக்கின்றன..
ஒரே கசப்பு மணமாய்
காற்றில்.
முடிவெட்டும் நிலையத்தை
மூடிவிட்டு
முத்துக் கருப்பன்
வறண்டு கிடக்கும் ஆற்றின்
நாறும் கஜகெடங்கில் மீன்பிடிக்கிறான்.
காச நோயில் அவதியுறும் கணவனையும்
விபரமறியா பச்சிளங் குந்தைகளையும் நினைத்து
பஞ்சுப் பேட்டைகாரனின் இச்சைக்கு
அடிபணிகிறாள் செல்வி.
குரங்கு வித்தை காட்டி
செத்துப் போன குரங்கின் ஞாபகத்தில்
பாழடைந்த வீட்டுத் திண்ணையில்
புலம்பிக் கொண்டிருக்கிறான்.
தங்கம் விலை
ஏறிக் கொண்டே போவதாய்
மளிகைக் கடைக்காரர் தொலைக்காட்சிப் பெட்டி
உளறிக் கொண்டிருக்கிறது.
நான்கு பாட்டில் பீர் குடித்ததாய்
வெள்ளையப்பன் கத்திக் கொண்டு
வெறும் அண்டர்வேரோடு
முட்டுசந்து வழியாக ஓடுகிறான்.
வெயிலில் வெந்து வெந்து
வைரங்களாகின்றன கூழாங்கற்கள்.

வசந்ததீபன்
- முறி…
- மௌனம் பேசும்
- பிரியாணி
- மழை புராணம்: 26 – இரும்பு வாழ்வு
- …பிறந்த பொன்னாடும்…
- ஈரான் போரும் உலக ஒழுங்கு மாற்றங்களும்
- கனவுகள் மொட்டைப் பாறையில் காய்ந்து கொண்டிருக்கின்றன
- சமூகம் கொடுக்கும் அழுத்தம்…
- அதுவும் கவிதைதான்
- வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் கலந்துரையாடலில், அடுத்து ந. பிச்சமூர்த்தி எழுதிய “ஞானப்பால்” சிறுகதை
- ஆண் பால் -அத்தியாயம் ஐந்து