This entry is part 2 of 11 in the series 5 ஏப்ரல் 2026

கடிகாரமின்றி

கதவு தாண்டியதில்லை

அன்றும் அப்படித்தான்

காலையில் ஒரு திருமணம்

பிறகு ஒரு நூல் அறிமுகம்

மாலையில் சந்திப்பு

இரவில் ஒரு விருந்து

எல்லாம் முடித்து 

வீடு வந்தேன் 

கடிகாரம் பார்த்தேன்

அட!

அதுவே ஓடவேயில்லை

இடையே 

நேரம் பார்க்கவுமில்லை

யாரும் கேட்கவுமில்லை

மீண்டும் பார்த்தேன்

அந்தக் கடிகாரத்தை

சிரிப்பு வந்தது

அது

எத்தனையோ உண்மைகளை

மௌனமாய்ப் பேசுவது 

நன்றாகவே கேட்கிறது

அமீதாம்மாள்

Series Navigationமுறி…பிரியாணி