நிலத்தடி நெருடல்கள்

புதை குழி புகுந்த பின்னரும் உயிர்த்தலின் பாவனைகள் நெஞ்சு தேக்கி வைத்திருந்த தாத்தாவின் ஆவலாதிகளை யார் தீர்ப்பார்கள் எனும் தீர்மானத்துள் மூழ்கித் தவிக்கும் வேர்களிடம் தொடங்குகிறது அவரின் முதல் குற்றச்சுமை அனுபவித்த உலகின் பொக்கைவாய் பொய் பூசிய வெற்றிலை பாக்கு மென்று…

நீவிய பாதை

பிறர் நிர்ப்பந்தித்த பாதையில் பலவீனமாய் பாதம் பதிக்கையில் முளைத்தது முதல் கோணல். அதிலிருந்து நீட்டிக்கப்பட்ட நேர்கோடும் தொடர்கின்றன மலை பாதை வளைவுகளாக... முற்றும் கோணலாகும் துற்சம்பவம் தடுக்க பட்டது, அக அகழ்வாராய்ச்சியினால்.. பயங்கள் மக்கியிருந்தது பலவீனங்களாக. ஒவ்வொன்றாய் அப்புறப்படுத்த படுத்த நீவி…
மீண்டும் முத்தத்திலிருந்து

மீண்டும் முத்தத்திலிருந்து

நீ யாராக மாற விருப்பம் ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர். நான் புலியாக வீரத்தின் சின்னமாக ஆணின் ஆகுருதியாக... நான் தென்றலாக பூவாக எங்கும் உலாவி... ஆடை களைந்து ஆடிய ஆட்டத்தில் உடம்பு சோர்ந்து விடவில்லை என் பிரிய மீனே என்று கொஞ்சினான்…

சிலர்

சிறிய நைலான் கயிறு போதும் வாழ்விலிருந்து விடுபட யாரோ வாங்கிக் கொடுத்த சேலையிலா விதி முடிய வேண்டும் வாழ்க்கை வாழக் கற்றுக்கொடுக்காது தப்பிப்போவது விடுதலையாகாது குரல்வளை நெரியும் போது நினைத்துப் பார்த்தாயல்லவா வாழ்ந்திருக்கலாமே என்று மனிதர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கவே வேண்டாம்…

என் பாட்டி

சித்தி சித்தப்பா அத்தை மாமா எல்லாரும் பாட்டியைத் தேடி வருவார்கள் எல்லாரையும் எனக்கு அறிமுகம் செய்வார் சர்க்கரை அளவு கேட்டபின் அவர்களுக்குக் காப்பி சீடை தருவார் பாட்டியின் சகோதரர்கள் வருவார்கள் காலணாவைப் பங்குபோட்ட கதையெல்லாம் என்னிடம் சொல்லிச் சிரிப்பார் ஓமவல்லி, துளசி…

நிரந்தரமாய்…

வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டு வீதியில் நிற்கும் ஒருவன்.. கரையான் புற்றில் கருநாகமாய் ஒருவன்.. கல்லை அரிசியில் கலப்பவன் ஒருவன்.. வாங்கிக் கடித்து பல்லை உடைப்பவன் ஒருவன்.. ஏழுகோடி பரிசென எஸ்எம்எஸ் அனுப்ப ஒருவன்.. ஏமாந்து இருப்புப் பணத்தையும் இழப்பவன் ஓருவன்.. ஒன்றுக்கு…

நம்பிக்கையெனும் கச்சாப்பொருள்

- எள்ளளவும் சந்தேகமில்லை எளிதில் நீங்கள் மன்னித்துவிடுவீர்கள் காலகாலமாய் அதற்காகத்தான் பழக்கப்படுத்தப்பட்டீர்கள் இருக்கக்கூடும் உங்களின் பெரும்தன்மையாக அதுதான் எங்களுக்கான மூலதனமும் கச்சாப்பொருளும் நம்பிக்கையுண்டு அழைக்க பின்தொடர்வீர்கள் மந்தைகளாக அற்புதங்கள் நிறைந்தது என்றிட முள் அப்பிய பாதையைக்கூட சகித்தீர்கள் கடந்தபின் நீங்கள் கண்டது…

விலகா நினைவு

எப்பொழுதும் எங்கள்நெஞ்சில் துஞ்சிய குழந்தையை மண்அடுக்குகளின் கீழ் புதைத்து விட்டு வெறுமையோடு வீடுதிரும்புகிறோம் மயானத்திலிருந்து. தோள்களில் இன்னும் ஊர்கிறது எறும்பைப்போல குழந்தையின் மெல்லிய மூச்சுக்காற்று. ரவிஉதயன் raviuthayan@gmail.com

நேர்மையின் காத்திருப்பு

மூட்டைப்பூச்சியின் இருப்பிடமென ஒதுக்கப்பட்டிருந்தாலும் கண்களுக்குள் அலார மிரட்டலோடு பழைய கதிரையொன்று. சுருங்கிய முக ரேகைக்குள் நேர்மை நிரம்பிய புன்னகை அனுபவங்கள் அழுத்திய ஆட்சி அந்தரத்து ஆரவாரமாய் தாங்கிய நினைவுகள். நேற்றைய முடிவுகளே நாளைய தீர்மானமாய் வைக்கோல் நுழைந்து உறிஞ்சும் புழுவென வழியும்…

ராசிப் பிரசவங்கள்

நாள் கிழமைப் பார்த்து டாக்டருக்குச் சொல்லிவிட்டால் கோள் ராசி பயமில்லை....டாக்டரின் கத்திக்குள் நட்சத்திரங்கள் ஒளிந்திருக்கும் ... மிகச் சிறந்த ராசியதில், சுத்த நட்சத்திரத்தில் அற்புதமான நாளன்று - அறுவை முறை கலையோடு அக் குழந்தை அவதரிக்கும் .. குழந்தை பிறக்கும் நேரம்…