மக்களும், வீடுகளும், கோவில்களும் க்ஷ£ணித்துப்போன வட்டாரம் ஒன்று ஒரு காலத்தில் இருந்தது. அதன் பழங்குடிகள் அங்கிருந்த எலிகளே. பிள்ளை, பேரன், பேத்தி, கொள்ளுப்பேரன் கொள்ளுப்பேத்தி என்றபடி அவை பெருகிவளர்ந்தன. பெரிய வீடுகளின் தரையிலுள்ள துளைகளில் அவை இருந்துவந்தன. குடும்பம் பெருகப் பெருக ஒவ்வொரு அரண்மனையையும் அடைந்து வசிக்கலாயின. பல விழாக்கள், நாடகங்கள், விவாகங்கள், விருந்துகள், பானங்கள் முதலியவற்றைக் கொண்டு ஆனந்தம் கொண்டாடி அவை காலம் கழித்து வந்தன. இப்படி அவை இருந்து வருகையில், ஏரியில் நீர் இருக்கிறது […]
” ஜிக்கன் வந்துட்டான்மா ” என்று என் அக்கா ஜெயா வேகமாய் ஓடிவந்து என் அம்மாவிடம் ரகசியக் குரலில் கிசுகிசுத்தது ஹாலில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்ததாய் பாவ்லா பண்ணிக்கொண்டிருந்த என் காதிலேயே விழுந்தது. ஜிக்கன் என் மாமா பையன். பொள்ளாச்சியில் எல்.ஈ.ஈ ( இந்தக்காலத்து டிப்ளமா இன் எலெக்ட்ரிக்கல் இஞ்சினீயரிங்க் ) படித்துவிட்டு அங்கேயே ஏதோ பட்டறையில் சூப்பர்வைசராக இருந்தவனை என் மாமா வலுக்கட்டாயமாக பொன்மலை ரயில்வே ஒர்க் ஷாப்பில் கலாசி என்னும் கடை நிலைப் பணிக்கு அனுப்பிவைத்திருக்கிறார். […]
“2012ல் உலகம் அழிந்துவிடும் என்கிறார்களே.. இது உண்மையா அம்மா? ” என்று வினிதா என்கிற வினு சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டது அவள் அம்மாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. “இது என்ன கேள்வி வினு. உன் எண்ண்ம் ஏன் இப்போது இதில் போகிறது…? “ “இல்லமமா, புவி வெப்பமயமாதலும் இதற்கொரு காரணம் என்று படித்தேன்.. அதான்” ”அதிருக்கட்டும், இப்ப இதெல்லாம் பேசற காலமா வினு, உனக்கே இது நியாயமா இருக்கா…” வினுவின் அம்மா கோமதிக்கு பெரும் கவலையாகி […]
பிரியங்கா முரளி என்னங்க அத்தை! பலகாரம் எல்லாம் ஆச்சா ?இல்ல இன்னைக்கும் இந்த வாலுங்க டிவி முன்னாடி தான் தவம் கிடக்குதுங்களா ?” ஆர்ப்பாட்டமாக கேட்டபடி உள்ளே நுழைந்தான் சக்திவேல் ! திருப்பூரில் அந்த வட்டாரத்தின் கேபிள் டிவி ஆப்பரேட்டர் ! வயது 23 , திருப்பூரில் சிறிய சாயப்பட்டறை வைத்து இருக்கும் கந்தசாமியின் மனைவி புனிதாவின் ஒன்று விட்ட அண்ணன் மகன் ! புனிதாவின் பெண்ணை அதாவது பாரதியை அவனுக்கு கொடுப்பதாக சிறு வயதிலேயே […]
தினமும் அந்த வீட்டைக் கடந்துதான் போய்க் கொண்டிருக்கிறேன். அதுதான் சுருக்கு வழி. கடந்து செல்லும் அந்த ஒரு கணத்தில் என் பார்வை அங்கே திரும்பாமல் இருந்ததில்லை. காலையில் தண்ணீர் வந்ததற்கு அடையாளமாய் அங்கே சுற்றிலும் ஈரமாக இருக்கும். ப்ளாஸ்டிக் குடங்களில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும். தண்ணீர் வராத நாட்களிலும் வெற்றுக் குடங்கள் அதே வரிசையில்தான் இருக்கும். கடந்து போய்க் கொண்டேயிருப்பார்கள். பொழுது விடிந்தால் எங்கள் பகுதியில் பலரும் சைக்கிளில் குடங்களைக் […]
1927 மார்ச் 2 அக்ஷய மாசி 18 புதன் மதராஸ். மதராஸ். மதராஸ். குழாய் மூலம் வெகு தொலைவில் பார்த்துக் கொண்டிருந்த மாலுமிகளில் ஒருத்தன் சொன்னான். கூட நின்ற கூட்டாளிகள் நாலைந்து பேர் உரக்கக் கைதட்டினார்கள். அந்தக் கைதட்டல் கீழே எஞ்சின் ரூமுக்குக் கடக்க, அங்கே இருந்து அவசரமாக வெளியே வந்து இன்னும் நாலு கப்பலோட்டிகள் ஓ என்று ஹூங்காரம் செய்து வானத்தைப் பார்த்து ரெண்டு கையையும் பரக்க நீட்டிக் கும்பிட்டார்கள். குசினியில் […]
ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா நீ உணர்ச்சியை அடக்கி ஆள வேண்டும் ஒரு மனிதனாய் ! பீரங்கித் தொழிற்சாலை அதிபதிக்கு வைர நெஞ்சம் தேவை ! இரக்க குணம், அன்பு நேயம் இவையெல்லாம் வெடி மருந்துச் சாலை முன் பொடியாகி […]
பாதரே பிமெண்ட்டா! எனது பேச்சின் முக்கியமான பகுதிக்கு வந்திருக்கிறேன். நான் காத்திருந்ததற்கு பலன் கிடைத்திருக்கிறது. கன்னிப்பெண்ணின் பிள்ளையை கடவுளாக ஏற்றுக்கொண்ட உங்களையன்றி வேறுயார் என்னையும் என்பிள்ளையையும் புரிந்துகொள்வார்கள் சொல்லுங்கள். நீங்கள் மட்டுமே சிசு வயிற்றுக்குள் வந்தவிதத்தைப்பற்றி கேள்விகேட்கமாட்டீர். அது தெய்வ குற்றமென்று நீங்கள் அறியமாட்டீரா என்ன? 23. எனது குரலை இனம்கண்டு புருஷ குரலா ஸ்த்ரீயின் குரலா என்று தீர்மானித்திருப்பீர்கள். பெண்சொல்லும் கதைக்கு பெண்ணைபோலவே வனப்பும் வசீகரமுமுண்டு. மாமாவைக் காட்டிலும் அத்தையோ; தாத்தாவைக்காட்டிலும் பாட்டியோ கதை சொல்லும்போதுதான் […]
ஏதோ ஒரு ஊரில் பிரலம்பவிருஷணன் என்றொரு காளை இருந்தது. அது மதம் பிடித்துப்போய் தன் மந்தையை விட்டுவிட்டுக் காட்டுக்குப் போய் விட்டது. காட்டில் ஆற்றங்கரையைக் கொம்புகளால் முட்டிக் கிளறிக் கொண்டும், இஷ்டம்போல் மரகதம் போன்ற புல்லை மேய்ந்து கொண்டும் அது திரிந்து வந்தது. அந்தக் காட்டில் பிரலோபிகன் என்றொரு நரி இருந்தது. அது தன் மனைவியோடு ஒருநாள் நதிக்கரையில் இன்பமாய் உட்கார்ந்திருந்தது. அந்த நேரத்தில் காளை நீர் குடிப்பதற்காக அந்த மணற்பரப்பிற்கு வந்து சேர்ந்தது. காளையின் இரண்டு […]
”பீப்…பீப்…பீப்….”.—என் காதருகில் கர்ணகடூரமாய் போன் சத்தம்.,என் தூக்கத்தைக் கலைத்தது.. “சனியனே! உன் வாயை மூடித் தொலை.” மூடிக் கொண்டது. என் குரலுக்குக் கட்டுப்படும். வாய்ஸ் ரெகக்னேஷன் சிப்—ன் ஜாலம்.. கணினியில் எக்ஸ்பர்ட் சிஸ்டமும், நாலெட்ஜ் இன்ஜினியரிங்கும், நுழைந்ததிலிருந்து ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் துறை வெகுவாகத் தேர்ச்சி பெற்று விட்டது.நேனோ டெக்னாலஜியும் கை கொடுக்க, இன்று அதன் வளர்ச்சியை கணிக்க முடியாது. இப்போதெல்லாம் மனிதர்கள் அதிகம் யோசிப்பதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. இன்று நமக்காக அவைகள் யோசிக்கின்றன.. ஸோ யோசிக்காமல் […]