ஈக்கள் மொய்க்கும்

This entry is part 12 of 44 in the series 15 ஏப்ரல் 2012

”தூங்கிட்டு இருக்கான்னுல நெனச்சேன்; அட ஆளே செத்துட்டான்னா?” அவனுக்குத் துணுக்குறும். பேருந்தைப் பிடிக்கும் அவசரத்தில் வேகமாய் நடந்து போகும் போது அவன் கால்கள் தடுக்கி விட்டது நினவுக்கு வரும். ‘பொணம் தடுக்கிச்சா” ;சிந்தையில் கலவரம் கூடும். கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னை நகரையே மலைப்பாம்பாய் உள் விழுங்கிக் கொண்டு மூச்சிரைப்பது போல கூட்டம் பிதுங்கிக் கொண்டிருக்கும். வித விதமாய் எத்தனை எத்தனை மனிதர்களையோ மாறி மாறி வரைந்து கொண்டிருக்கும் மாபெரும் உயிர்த் திரைச்சீலை போல பேருந்து நிலையம் […]

பழந்தமிழரின் நிலவியல் பாகுபாடு

This entry is part 11 of 44 in the series 15 ஏப்ரல் 2012

முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com நிலம் என்பதற்கு தமிழ் நிலம் என்று பொருள்கொள்ளப்படுவது நோக்கத்தக்கது. தமிழர்;கள் தாங்கள் வாழ்ந்த பகுதிகளை நிலங்களாகப் பாகுபடுத்தினர். நில அமைப்புகளைக் கொண்டே அவற்றிற்குப் பெயரிட்டனர். ‘‘நிலம் என்பதற்கு இடம், தலம், நானிலத்தின் பொது தேசம் பூமி’’ எனும் பல பொருள்களை மதுரைத் தமிழ்ப் பேரகராதி’’ (மதுரைத் தமிழ்ப் பேரகராதி இரண்டாம் பாகம் ப. 101.) குறிப்பிடுகிறது. தமிழர்களின் நிலவியல் பாகுபாடு குறித்த பல்வேறு […]

ஆணுக்கும் அடி சறுக்கும்…!

This entry is part 6 of 44 in the series 15 ஏப்ரல் 2012

மொட்டை மாடிக்குச் சென்று துவைத்த துணிகளை கொடியில் காயப்போட்டபடியே நினத்துக் கொண்டாள் ராஜம்……என்னமா… வெய்யில் கொளுத்தறது..இந்த வருஷம் இப்படி வெய்யிலை பயன்படுத்தாமல் நான் வீணாக்கறேனே… கையோட இன்னைக்கே… ஸ்கூட்டர்ல மாவு திரிக்கிற மெஷினுக்குப் போயி ரெண்டு படி அரிசியை திரித்துக் கொண்டு வந்து நாளைக்கே கையோட வடாம் பிழிஞ்சு வைக்கணும்.கடையில் வாங்கிக் கட்டுப் படியாகாது. போன தடவை மாங்கு… மாங்குன்னு பிழிந்து வைத்தது….போக வர வறுத்துத் தின்று தீர்த்தாச்சு. வெறும் வத்தல் குழம்பு பண்ணி தொட்டுக்கக் கருவடாம் […]

சுனாமி யில் – கடைசி காட்சி.

This entry is part 4 of 44 in the series 15 ஏப்ரல் 2012

இந்த நிமிடம் நிஜம். அடுத்த நொடியைப் பற்றி எனக்கு தெரியாது. நான், சென்னையில் , ம்யிலையில் 2.30 மதியம்( 11.04.2012) சுனாமியின் அலைகளால், பீதி உணர்வு ஏற்பட்டு, ஆபிஸ் விட்டு, வெளியே ஓடிவர, எனக்கு முன், பலர், அதே பீதியில் படியிறங்கி, ஓடிக்கொண்டிருந்தனர். மதியம் , டீக்காரனையும் காணவில்லை. ஏதோ கடைசியாக, பால் குடித்துவிட்டு, ஒரே கும்பலாக சாகலாம் என்ற எண்ணம் வேறு ஓடிக்கொண்டிருந்தது. மேனஜருக்கு, முடிக்க வேண்டிய பைலைப்பற்றி கேட்டார்.ஒரே எரிச்சலாக வந்தது. சுனாமில் செத்தால், […]

முள்வெளி- அத்தியாயம் -4

This entry is part 1 of 44 in the series 15 ஏப்ரல் 2012

“ராஜேந்திரன் ஊருக்குள்ளே இருக்கறப்போ சுமாராத்தான் தகவல் தந்தீங்க. அவரு காணாமப் போன பிறகு உங்களாலே ஒரு தகவலும் தர முடியலியே?” மகேந்திரன் எரிச்சலுடன் கேட்டான். “அவரா இஷ்டப்பட்டு எங்கேயோ போயிருக்காரு. அவ்வளவு தான் சொல்ல முடியும்” “ரொம்ப நல்லாயிருக்கு. உங்களுக்கு வசதியா ஒரு பதிலைச் சொல்லாதீங்க. ராஜேந்திரன் என் சொந்தத் தங்கச்சி புருஷன். வேற பொம்பளைங்க யாருக்கும் அவனுக்கும் தொடர்பு இருக்கான்னாக்க நிச்சயமா சொல்ல முடியலேன்னுட்டீங்க” “ஸார். ராஜேந்திரன் பிஸினஸ் விஷயமா எத்தனையோ பேரை சந்திக்கிறாங்க. இதுக்கு […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்து நாலு

This entry is part 35 of 41 in the series 8 ஏப்ரல் 2012

1927 ஃபெப்ருவரி 28 அக்ஷய மாசி 16 திங்கள் பிராமணோத்தமரே என்னை மன்னித்தேன் என்று சொல்லும். முதலில் அதைச் சொல்லாவிட்டால் நான் உம்மோடு ஒரு போதும் பேசப் போவதில்லை. நான் காலில் விழாத குறையாகச் சொன்னேன். மலையாளத்துப் பிராமணன் மூச்சை உறிஞ்சி சமுத்திரத்து உப்புக் காற்று வாசனையை பரிமள சுகந்தமாக அனுபவித்தபடி என்னை தீர்க்கமாகப் பார்த்தான். ஆதி நாட்களில் அதாவது நான் மதராஸ் பட்டிணத்தில் காராகிரகம் புகுந்த காலத்தில் இவன் பார்வை பட்டுத்தான் இன்றைக்கு இப்படி கப்பலில் […]

அதுவே… போதிமரம்….!

This entry is part 32 of 41 in the series 8 ஏப்ரல் 2012

பகவானே….என்ன சோதனை…. இது? ….என் தலையெழுத்தே… இவ்வளவு தானா? அவருக்கு ஒண்ணும் ஆயிடக் கூடாதே……அவரைக் காப்பாத்தும்மா… தாயே… உன் கோயில் வாசல்ல…..வந்து மண்சோறு சாப்பிடறேன்…அவர் என்ன செய்திருந்தாலும் அவரை மன்னித்துவிடு… தாயே…லோகமாதா…அவரை எனக்கு திருப்பித் தா…இது நாள் வரைக்கும் உன்னையன்றி எனக்கு வேற எந்த கதியும் இல்லையே..என் குடும்பத்தைக் காப்பாத்திக் கொடும்மா…அகிலாண்டேஸ்வரி… இதயத்தைப் பிழிந்து வேண்டிக் கொண்டதால் வேதனையில்… கண்களில் இருந்து போல பொலவென்று கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. இந்தக் கலங்கிய கண்களுக்கு காரணமான மீனாட்சியின் கணவர் […]

“சூ ழ ல்”

This entry is part 28 of 41 in the series 8 ஏப்ரல் 2012

சுறுசுறுப்பாக வேலை ஓடியது ராகவாச்சாரிக்கு.. சுற்றிலும் படர்ந்த அமைதி. வாசலில் அடர்ந்து பரந்து விரிந்திரிக்கும் மரத்தின் குளிர்ச்சியான நிழல். தலைக்கு மேலே சரசரவென ஓடிக் கொண்டிருக்கும் மின் விசிறி. அதன் சத்தம் மட்டும் துல்லியமாய் காதுகளில். கதவைச் சாத்திடு…யாருக்கும் நான் இருக்கிறதைச் சொல்ல வேண்டாம்…என்று விட்டு, தனது டூ வீலரையும் உள்ளே தூக்கி நிறுத்தியிருந்தார். விடுமுறை நாளில் வேலைக்கு வருவது நிலுவை வேலைகளை முடிக்க. அன்றும் யாரேனும் தேடி வந்து விட்டால் வேலை கெட்டுப் போகும். அதோடு […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -20

This entry is part 26 of 41 in the series 8 ஏப்ரல் 2012

“அரசகுற்றத்திற்கு மரணதண்டனைபெற்ற அநேகருக்கு இங்கே தான் சமாதி. நேற்று அரசர் பரிவுடன் நடந்துகொண்டார்.இல்லையெனில் கணிகைப்பெண் சித்ராங்கியும் இந்தக்கிணற்றில்தான் பட்டினி கிடந்து செத்திருப்பாள். கொஞ்சம் இப்படி வாருங்கள். இந்த இடத்தில் காதை வைத்து கேளுங்கள். ” 22. சாம்பல் நிற கீரி ஒன்று முட்செடிபுதரிலிருந்து மெல்ல ஓடி வருகிறது. இவர்களைப்பார்த்ததும் அசையாமல் ஓரிரு கனங்கள் நிற்கிறது. தனது கூர்மையான கருத்த மூக்கை அரசமர சருகுகளைச் சீய்த்து எதையோ தேடுவதுபோல பாவனை செய்தது. நிமிர்ந்தபோது அதன்கண்களிரண்டும் இளம்வெயிலில் ஈரத்தன்மையுடன் ஒளிர்ந்தன. […]

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) அங்கம் -2 பாகம் – 18

This entry is part 21 of 41 in the series 8 ஏப்ரல் 2012

  ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara)  மூவங்க நாடகம்            (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 18 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா சார்லஸ் ஒரு முட்டாள் !  அடால்·பஸ் வெறும் பேச்சாளி !  ஸ்டீ·பன் ஒரு சோம்பேரி !  பார்பரா ஒரு பைத்தியக்காரி !  ஆன்ரூ நீ ஒரு சூது வர்த்தகன் !  இவை என் சொந்தக் கருத்துக்கள்.  […]