சியாவ் செங் என்ற சிறுவன், சீனாவின் ஒரு நகரில் தன் தாயுடன் வாழ்ந்து வந்தான். தாய்க்கு உதவியாக, தினமும் வீட்டிற்கு அக்கம்பக்கம் இருக்கும் காட்டுப் புற்களை வெட்டித் தருவான். அதைத் தாய், சந்தையில் விற்று, கிடைக்கும் பணத்தில் உண்ணத் தேவையான அரிசி, டம்பிளிங் என்னும் கொழுக்கட்டை செய்யும் மாவையும், குடிக்கத் தேவையான தேநீர் இலைகளையும் வாங்கி வருவார். ஒரு கோடை காலத்தில், எங்கும் வறட்சி ஏற்பட்டது. எல்லா பக்கங்களிலும் புற்கள் வாடிச் சாய்ந்திருந்தன. ஒரு நாள், தாய், […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அதுண்மையே. எனக்கு சைகிள்விட கற்றுத் தந்தது எட்வர்ட் திரிஃபீல்ட் தான். அப்படித்தான் நான் அவரோடு பழக ஆரம்பித்தேன். பின்சக்கரத்தோடு குட்டிசக்கரம் இணைத்த ‘ஆபத்தற்ற’ சைகிள் கண்டுபிடித்து எத்தனை காலமாச்சோ அறியேன். ஆனால் இந்த கென்ட் மண்ணில் அது ரொம்ப புது ஜாமான். இதை வெச்சிக்கிட்டு ஓட்டிப்போகையில், என்னைக் கடந்து கனமான டயருடன் யாராவது சைகிளில் விர்ரென்று போகையில் ஆவென்று அது கண்ணில் இருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டிருப்பேன். நடுவயசுக்காரர்கள் இப்பவும் கிண்டலாகப் பேசுகிறார்கள். […]
சீலைபேப்பேனும், தெள்ளுப்பூச்சியும் ஒரு அரசனின் அரண்மனையில் தனக்கு நிகரில்லை என்னும்படி மிக அழகான பஞ்சணை ஒன்று இருந்தது. அதன் மேல்விரிப்பு மடிப்பின் ஒரு ஓரத்தில் மந்த விசர்ப்பிணி என்னும் ஒரு சீலைப்பேன் இருந்துவந்தது. அரசன் தூங்கும்போது அவனுடைய ரத்தத்தைக் குடித்து அது வளர்ந்தது. பிள்ளையும் பேரனுமாகப் பெற்றெடுத்துப் பெரிய குடும்பமாக வாழ்ந்தது. அரசனின் ரத்தம் குடித்துக் குடித்து அதன் உடம்பு அழகாகவும் புஷ்டியாகவும் காணப்பட்டது. இப்படி இருக்கும்போது ஒரு நாள் காற்றில் அடித்துக்கொண்டு வந்த ஒரு […]
மலர்த் தோட்டத்தினுள் அந்த மலர்ப் பதுமை மெதுவாக நடந்தாள்! குவளையும் முல்லையும்! கனகாம்பரமும் செண்பகமும்! செவ்வந்தியும் செங்காந்தளும்! நீலோத்பலமும் நாகலிங்கமும்! சம்பங்கியும் ரோஜாவும்! எத்தனை மலர்கள்! தோட்டத்திலுள்ள மலர்களைச் சொல்லவில்லை! இவ்வளவும் வனப்புமிக்க அவள் பொன்னுடலில் பூத்திருக்கின்றன! தன் மேனியில் இத்தனை மலர்கள் பூத்திருக்க அவளுக்கு இன்னும் ஆசையைப் பாருங்கள்! மங்களகரமான மஞ்சள் நிறங்காட்டும் சூரிய காந்தியைப் பறித்துக் கொண்டு, “நீ என் முகத்திற்கு இணைதானோ?” என்று கிண்கிணிக் குரலில் கேள்வி எழுப்ப, “இணையெப்படி யாகும் இனியவளே!” […]
(ரெ.கார்த்திகேசு) இருபது மாணவர்கள் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். பேராசிரியர் வேன்டன்பர்க் வழக்கமாக தாமதமாக வருபவர்தான். ஆனால் பத்து நிமிடத்துக்கு மேல் தாமதமாகாது. பதினைந்து நிமிடம் வரை பேராசிரியர் வரவில்லையென்றால் மாணவர்கள் கலைந்து செல்லலாம் என்ற விதி உண்டு. இருந்தும் மாணவர்கள் காத்திருந்ததன் காரணம் வேன்டன்பர்கின் வகுப்பு சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். அதை எதிர்பார்த்துத்தான்…! அமெரிக்காவின் மிசௌரி பல்கலைக் கழகத்தில் பரவெளி ஆய்வு மையத்தின் ஆய்வுக் கூடத்தில் காத்திருந்த மாணவர்கள் இருபது பேரும் பரவெளிக் கோள்களில் கனிம வளங்கள் பற்றி […]
”எப்பப் பார்த்தாலும் வாங்கின சம்பளம் பூரா ஏதாவது செலவு பண்ணிடுறே. போன மாசம் 4 செட் ட்ரெஸ், மூணாம் மாசம் காஸ்ட்லி கெடிகாரம்., இந்த மாசம் ஷூ., எப்பத்தான் சேமிப்பே.. பாங்க் அக்கவுண்ட்ல ஒரு சேவிங்ஸும் இல்லை. ” ”சம்பளம் இன்னும் அதிகம் வரட்டும்மா.. எப்பப்பாரு டெபாசிட் போடு அப்பிடிங்கிறீங்க. அப்புறம் எப்பத்தான் லைஃபை என்ஜாய் செய்றது”. மகன் வேலைக்கு சேர்ந்து முணு மாதமாக வீட்டில் நடக்கும் வாக்குவாதம்தான் இதெல்லாம். சொல்லிப் பிரயோஜனமில்லை என பால்கனிக்கு காற்று […]
துளி சத்தம் இன்றி அதை வைத்து விட்டுப் ப+னை போல் நழுவினான் அவன். எந்தப் ப+னைக்கு பயந்து ‘ஒரு சத்தம் கொடுப்பா’ என்று அக்கறையாக நான் சொல்லியிருந்தேனோ அதைப் பொருட்படுத்தாமல் அவனே ப+னைபோல் பதுங்கினால்? தற்செயலாக நான் எழுந்துவர அடர்ந்து தலை கவிழ்ந்து நிழலாய்க் கவிழ்ந்திருந்த வாசல் மரத்தின் கிழே தலையைப் பதவாகமாய்க் குனிந்து சைக்கிளை மிக மென்மையாக மிதித்து நகர்ந்தான். “Nஉற…Nஉற…பார்த்தியா…பார்த்தியா…சொல்லாமப் போறான் பாரு…எவ்வளவு சைலன்ட்டா நழுவுறாம்பாரு…” அது அவன் காதில் நிச்சயம் விழுந்திருக்காது. அவன்தான் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா எம்மைத் தவிர மற்ற எல்லோரையும் ஏழையாய் ஆக்குகின்றீர். நீங்கள் யாவரும் வறுமைக்கு அடிமை ! ஏழ்மையே உமது இறைவன், மதம் எல்லாம் ! உமது கண்முன் ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி உயிரிழப்பதை எப்படி நியாயப் படுத்துவாய் ! நமக்கு ஏழ்மை ஒழிய வேண்டுமா ? அல்லது சீரும், செல்வச் செழிப்பும் நிறைய வேண்டுமா […]
தமிழில் எஸ். சங்கரநாராயணன் பளபள மஞ்சள் ரோல்ஸ் ராய்ஸ் காரில் நாங்கள் போனோம். பிளாக்ஸ்டேபிளில் இருந்து ஃபெர்ன் கோர்ட் மூணு மைல் தொலைவு. சாந்துக்கலவை பூச்சு வீடு. ஒரு 1840 வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம். அலட்டல் இல்லாத அறையறையாய்ப் பிரித்த எளிய வீடு. நல்ல விஸ்திரணம். காம்பவுண்டில் ரெட்டைக் கதவு. அரைச்சந்திர வில்வளைத்த வாசல் நிலை. இதேபோல முதல்மாடியிலும் இதே வில்நிலைப்படி. தணிந்த கூரையை வெளிச்சுவர் மறைத்தது. ஒரு ஏக்ரா அளவு தோட்ட நடுவில் வீடு. நெரிசலாய் […]
நன்றி கெட்ட மனிதன் ஒரு ஊரில் யக்ஞதத்தன் என்றொரு பிராமணன் இருந்தான். அவனது குடும்பத்தைத் தரித்திரம் பிடுங்கித் தின்றது. ஒவ்வொரு நாளும் அவன் மனைவி அவனைப் பார்த்து, ”ஓய், பிராமணா! சோம்பேறி! கல்நெஞ்சனே! குழந்தைகள் பசியால் துடிக்கிறது. உன் கண்ணில் படவில்லையா? எப்படி நிம்மதியோடு இருக்க முடிகிறது உனக்கு? காடு மேடு எங்காவது போய்ச் சாத்தியமானதைச் செய்து சோறு கிடைக்க வழி பார்க்கிறதுதானே!” என்று சொல்லிக்கொண்டே இருப்பாள். தினசரி இதே பல்லவியைக் கேட்டுகேட்டுச் சலித்துப்போன அந்தப் […]