சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ்

This entry is part 10 of 11 in the series 3 ஜனவரி 2021

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ் இன்று (27 டிசம்பர் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்கத் தேவையான வலை முகவரி: https://solvanam.com இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:  கட்டுரைகள்: இணையவழி: கற்றலும் கற்பித்தலும் – லோகமாதேவி கோன்ராட் எல்ஸ்டின் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு முதற்கனல் – விளைநிலத்தின் கண்ணீர் துளிகள் – ரா. கிரிதரன் அகல் விளக்குகள் வெளிச்சத்தினூடே விரியும் அழியாச் சித்திரம் – சிவா கிருஷ்ணமூர்த்தி உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை– ரவி நடராஜன் நானன்றி யார் வருவார்…. – கிருஷ்ணன் சங்கரன் நள்ளென் நாதம் – முத்து காளிமுத்து வலிதரா நுண் ஊசிகள் – பானுமதி ந. சிறுகதைகள்: கெய்ரா – சுஷில் குமார் வெந்து தணியும் நினைவு – ம.செ அப்பயி ஏமாற்றினாள் – பாஸ்கர் ஆறுமுகம் கழுத்து நீண்டு வாய் குறுகிய பாட்டிலுக்குள் ஒரு காடு – மாலதி சிவா கவிதைகள்: கைவிடப்பட்ட இறந்த உடலை முத்தமிடும் கவிதை – கு. அழகர்சாமி புத்தர் சிறு ஒலியாகவும் இருந்திருப்பார் – ஜீவன் பென்னி தவிர: மகரந்தம் – கோரா (குளக்கரை பகுதிக் குறிப்பு:) தானுந்து பேட்டரி மறுசுழற்சியும் காரீய நஞ்சேற்றமும் – கோரா […]

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

This entry is part 9 of 11 in the series 3 ஜனவரி 2021

  ட்டி. ஆர். நடராஜன்    1. என் வாழ்க்கை என் வாழ்க்கை அளவே இருந்தது     ஜேன் ஹிர்ஷ்ஃ பீல்ட்  என் வாழ்க்கை என் வாழ்க்கை அளவே இருந்தது.  என் அறைகள் அறைகளுக்கான அளவில்  அதன் ஆத்மா ஆத்மாவின் அளவில். பின்னணியில் உயிரணுவின் ரீங்காரம் அதற்கு மேலாக சூரியன், மேகங்கள், கிரஹங்கள் அது எலிவேட்டர்களையும், புல்லட் ரயில்களையும், பல்வேறு விமானங்களையும் ஒரு கழுதையையும்  ஓட்டியது. அது காலுறைகளையும், சட்டைகளையும்அணிந்தது அதற்கென்று அதன் சொந்தக் காதுகள், மூக்கு. அது சாப்பிட்டது, தூங்கிற்று, கைகளையும், ஜன்னல்களையும்  திறந்தது மூடியது. […]

மினி பாரதம்

This entry is part 8 of 11 in the series 3 ஜனவரி 2021

வணக்கம். Mini Bharath எனும் எனது ஆங்கில மூலம் என்னாலேயே தமிழாக்கம் செய்யப்பட்டு அதை நிவேதிதா பதிப்பகம், 1/3, வேங்கடேஷ் நகர் பிரதான சாலை,விருகம்பக்கம், சென்னை 600092, மினி பாரதம் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளது என்பதைத் திண்ணை அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது பதின்மர்க்கான புதினமாகும். ஜோதிர்லதா கிரிஜா

பந்தம்

This entry is part 7 of 11 in the series 3 ஜனவரி 2021

குணா (எ) குணசேகரன் வரி அணி பந்தும், வாடிய வயலையும்,மயில் அடி அன்ன மாக்குரல் நொச்சியும்,கடியுடை வியல் நகர் காண்வரத் தோன்றத்தமியே கண்ட தண்டலையும் தெறுவரநோய் ஆகின்றே மகளை! நின் தோழிஎரி சினம் தணிந்த இலைஇல் அம் சினைவரிப் புறப் புரவின் புலம்பு கொள் தெள் விளிஉருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கிஇலங்கு இலை வென்வேல் விடலையை,விலங்கு மலை ஆர் இடை, நலியும் கொல் எனவே? கொல்லைப்புறத்தில் காகம் கரைந்தது. அயலூர் செய்தி வரும் என்று சொல்வார்கள். […]

கானல்

This entry is part 6 of 11 in the series 3 ஜனவரி 2021

கைக்கெடிகாரத்தைப் பார்த்தார் கந்தாடை. ஆறு அடிக்க இன்னும் ஒரு நிமிஷம் இருந்தது. சூரியன் மேற்கே விழுந்து கொண்டிருந்தான். அவர் தான் உட்கார்ந்திருந்த பார்க் பெஞ்சிலிருந்து எழுந்து நின்று கால்களை உதறிக் கொண்டார். ரத்த ஓட்டம் சமநிலைக்கு வர சில நிமிஷங்கள் ஆகும். வயதாவதை இது போன்றவற்றை அல்லாமல் வேறு எப்படித்தான் இயற்கை மனுஷனுக்கு உணர்த்துவதாம்? இருட்ட இன்னும் ஒரு கால் மணி, அரை மணியாகும். ஆனால் அவர் இப்போது கிளம்பினால்தான் பதினேழாவது கிராஸில் உள்ள வீட்டைத் தெரு விளக்குகள் எரியத் […]

கவிதையும் ரசனையும் – 8 – கே.ஸ்டாலின்

This entry is part 11 of 11 in the series 3 ஜனவரி 2021

28.12.2020 அழகியசிங்கர்             சமீபத்தில் நடந்த கவிதை உரையாடல் நிகழ்ச்சியில் நான் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்க மறந்து விட்டேன்.              கவிதை புரிய வேண்டுமா? வேண்டாமா? நான்  இங்குப் பேசுவது புரியக் கூடிய கவிதைகளைத்தான்.  புரியாமல் எழுதப்படுகிற கவிதைகளைப் புரிந்துகொள்ள முயல்வேன்.  அப்படியும் அது புரியவில்லை என்றால் விட்டுவிடுவேன்.             சரி. ஒரு கவிதை புரியாமல் இருக்க வேண்டுமா? அல்லது புரியத்தான் வேண்டுமா? நிச்சயமாகப் புரியவேண்டும்.  வாசிப்பவருக்கு ஏற்றார்போல்தான் இருக்க வேண்டும் கவிதை.              இன்றைய சூழ்நிலையில் கவிதைப் புத்தகங்களே விற்கப்படுவதில்லை.  புரியாத போகிற கவிதைப் […]

ஆன்றோர் தேசம்

This entry is part 5 of 11 in the series 3 ஜனவரி 2021

short story எஸ்.சங்கரநாராயணன் ••• ஓர் அலுவலகத்தின் வெவ்வேறு ஊழியர்கள் போல, அல்லது அதிகாரிகள் போல அவர்கள் தங்கள் வீட்டிலேயே நடமாடினார்கள். ••• கல்யாணம் ஆகி வெகுகாலம் கழித்து அவர்களுக்குப் பிறந்த பிள்ளை ஆண்பிள்ளை. பழனி வரை பாத யாத்திரை போய்ப் பெற்றெடுத்த பிள்ளை. தண்டாயுதபாணி என்றே குழந்தைக்குப் பெயர் வைத்தார்கள். தங்கள் வசதிக்கு மீறியே அவனை அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். பெரிய பள்ளியில் நல்ல படிப்பு படிக்க வைத்தார்கள். இன்ஜினியரிங் வரை அவன் நன்றாகவும் படித்தான். […]

கொங்குதேர் வாழ்க்கை : தொ.ப

This entry is part 4 of 11 in the series 3 ஜனவரி 2021

முனைவர் ம இராமச்சந்திரன்உதவிப் பேராசிரியர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவு-தமிழ்ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) ஊத்தங்கரை கிருஷ்ணகிரி மாவட்டம். மதுரை தியாகராசர் கல்லூரி பல சிறப்புகளைக் கொண்டு தனக்கான ஆளுமையை உருவாக்கிக் கொண்டது. அதற்குப் பல அறிஞர்கள் காரணமாக இருந்துள்ளனர். அவர்களில் ஒருவர் பேராசிரியர் தொ.பரமசிவன். இக்கல்லூரியில் நான் 1995-2000 ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படித்துக்கொண்டு இருந்தேன். தியாகராசர் கல்லூரி சைவ மரபிற்கும் தமிழ் அறிஞர்களுக்கும் பெருமக்களுக்கும் பெயர்பெற்ற கல்லூரி. […]

மறக்க முடியாத மரக்காயர் மாமா

This entry is part 3 of 11 in the series 3 ஜனவரி 2021

(24.4.1991  “தேவி” இதழில் வந்தது. “நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்”-இன் “அதென்ன நியாயம்?” எனும் சிறுகதைத் தொகுப்பில் உள்ளது.)       காலியாய்க் கிடந்த பக்கத்து வீட்டு மனையின் எதிரே வந்து நின்ற ஆட்டோவிலிருந்து, குஞ்சம் வைத்த அந்தக் காலத்துப்பாணித் தொப்பியுடனும், கையில் ஒரு தடியுடனும் இறங்கிய பெரியவரைப் பார்த்ததும், விசாலாட்சி, ‘பக்கத்து மனை யாரோ சாயபுக்கு சொந்தம்னு பேசிண்டாளே, அது இவராத்தான் இருக்கணும்’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள். ‘மனையை வெறுமனே பார்வையிட்றதுக்கு வந்தாரோ, இல்லேன்னா வீடுகீடு கட்டப் […]

அ. முத்துலிங்கத்தின் உண்மை கலந்த நாட்குறிப்புகள்

This entry is part 2 of 11 in the series 3 ஜனவரி 2021

ஆயிரத்தொரு இரவுகள்  என்ற புனைவைப் பற்றி நாம் கேட்டிருப்போம். ஃபிரேம் (Frame) வகையான கதை சொல்லல் முறையில்,  அதாவது திரைப்படத்திற்கான  காட்சிகள்  ஒன்று – இரண்டு என எழுதப்படுவதுபோல் கதைக்குள் கதை வைத்துக் (Genre )கதை சொல்லல். ஆயிரத்தொரு இரவுகள்  அரபிக் கதையல்ல.  இந்தியாவிலிருந்து மேற்காக நகர்ந்தது . பஞ்சதந்திரம் மற்றும் ஜாதகக்கதைகள் இப்படியான பிரேம் கதைகளாக உருவாகி பாரசீகத்துடாக அரேபிய வியாபாரிகளால்  வியாபாரப் பொதிகளோடு எடுத்துச் செல்லப்பட்டது.  இப்படியான கதை சொல்லல் ஐரோப்பாவுக்குச் சென்று அங்குள்ள […]