ஊதுவத்தியும், பன்னீரும், வாசனைத் திரவமும், மலர்ச்செண்டுகளின் மணமும் கலந்ததொரு வித்தியாசமான வாடை.. ஆங்காங்கே பெண்கள் கூடிக்கூடி குசுகுசுவென இரகசியமும், வாயின் மீது அடித்துக் கொண்டும், புலம்பிக் கொண்டும், வயிற்றில் புளியைக் கரைக்கும் சூழல். பெரிய பட்டாசாலை முழுதும் நிறைந்த உறவுகளும், நட்புகளும், மங்கலான முகங்களுடன்…… “ஏண்டி பாவி, இப்படி அல்பாயுசுல போயிட்டியேடி.. நன்னாத்தானே இருக்கேன்னு நினைச்சுண்டிருந்தேனே.. இப்படி தலையில கல்லைத் தூக்கிப் போட்டுட்டியேடி.. தற்கொலை பண்ணிண்டு உயிரை மாய்ச்சுக்கற அளவுக்கு நோக்கு என்னடி பிரச்சனை. […]
நான்கு பாவாணர்கள் மேசையின் மீது இருந்த திராட்சைரச மதுக் கோப்பையைச் சுற்றி அமர்ந்திருந்தனர். முதல் கவிஞன், ”எம் மூன்றாம் கண் மூலமாக, ஒரு மாய வனத்தின் பறவைகள் மேகங்களாய் விண்வெளியில் நகருவது போல் இந்த மதுவின் சுகந்த மணத்தையும் காண்பதாக என்ணுகிறேன் யான்” என்றார். இரண்டாம் பாவலரோ தம் சிரத்தை உயர்த்திக் கொண்டு, “எம்முடைய அகச்செவியின் மூலம் அந்த மூடுபனிப் புள்ளினங்கள் பாடுவதைக் கேட்கிறேன். மேலும் வெண்மையான ரோசா தன் மென்மையான இதழ்களுக்குள் தேனீயை […]
மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -3 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் கற்பழிப்பு, […]
கி.பி. 2050 பவானி 60 – ‘செஞ்சி அழிந்து சென்னை பட்டினம் உருவாயிற்று‘ – அப்படீங்களா? – உன் பேரு என்னன்னு சொன்ன? – பவானி, உங்கள் சினேகிதி ஹரிணியுடைய பெண். – புதுச்சேரின்னு சொன்ன ஞாபகம்? – தற்போதைக்கு புதுச்சேரி. பிரான்சு நாட்டிலிருந்து வந்து மூன்று மாதமாகுது நல்ல கோதுமைநிறத்தில் வயதுக்குப்பொருத்தமின்றி மனிதர் ஆரோக்கியமாகவே இருந்தார். கோடைவெயில் நிறத்தில் குர்த்தாவும் பைஜாமாவும், அவர் உயரத்திற்கு நன்றாகவே பொருந்தியது. தலைமயிர் வெள்ளைவெளேர் […]
சத்யானந்தன் ஞாயிற்றுக் கிழமை எழுந்து வெகு நேரம் ஆனாலும் மொபைலை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. சில சமயம் இன்னொரு போனிலிருந்து அழைப்பு கொடுத்து அதைக் கண்டுபிடிக்க வேண்டி இருக்கும். இன்று முதல் வேலையாக அதை எடுத்தான். கவனமாக இரவு தலைமாட்டிலேயே வைத்துப் படுத்தது சுளுவாக எடுத்துப் பார்க்க வசதியாக இருந்தது. எதிர்பார்த்தது போலவே குறுஞ்செய்தி இருந்தது. இன்று முதல் வேலையாக அதைச் செய்ய நினைவுட்டல். இன்று எப்படி இருந்தாலும் அதைச் செய்தாக வேண்டும், நேற்று புரசைவாக்கத்தில் […]
நெடுங்கதை::ஜெயஸ்ரீ ஷங்கர்,தில்லை அதிகாலை நேரம்…சூரியன் சோம்பல் முறித்து எழுந்து நிமிர்ந்து மூடிய கண்களைத் திறக்கிறான். மெல்ல மெல்ல ஒளிக்கீற்றுகள் கதவைத் தட்ட பூமியும் கண் விழிக்கிறது. நித்யா…நித்யா…. நித்யா ! எத்தனை தடவை கேட்கிறேன்…..சரின்னு ஒரு வார்த்தை சொல்லேன்….ப்ளீஸ்… படுக்கையை விட்டு எழுந்திருக்காமலே…நேற்று ராத்திரி தான் விட்ட இடத்திலிருந்து மறுபடியும் ஆரம்பித்து தேன்மொழி கெஞ்சிக் கொண்டிருந்தாள். இப்பவே ஆரம்பிச்சுட்டியா…..சும்மா நை…நை…ன்னு என்னை தொல்லை பண்ணாதே…! கொஞ்ச நேரம் அமைதியா இரேன்..நான் முக்கிய வேலையா இருக்கேன்…இப்போ.. புரிஞ்சுக்கோ. தங்கையை […]
மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -2 ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பரத்தைமைத் தொழிலுக்கு மெய்யான காரணம் பெண்டிரின் சீர்கெட்ட பாதையல்ல ! ஆடவரின் ஆதிக்கப் போதையல்ல ! ஏழ்மை, வறுமை, இல்லாமை, பசி பட்டினி, தனிப்படுதல், வேலையின்மை, முறிந்த குடும்பம், சமூகப் புறக்கணிப்பு, பெற்றோர் புறக்கணிப்பு, வன்முறைக் […]
ரசிப்பு வாசு ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான். இருபத்தியேழு வயது இளைஞன். அந்த வயதுக்கே உரிய துடுக்கும், பழக்க வழக்கங்களும் உண்டு. கைநிறைய சம்பளம் வேறு. கேட்க வேண்டுமா? நண்பர்கள் வட்டமும் அப்படித்தான். ஆளுக்கொரு பைக், கேர்ள் பிரண்ட், சனிக்கிழமை மாலை வேளைகளில் மது. வாழ்க்கைப் பயணம் சந்தோஷமாக கழிந்தது. அந்த சனிக்கிழமை மட்டும் வராமல் இருந்திருந்தால்… எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். சனிக்கிழமை விடுமுறை நாள்தான். ஆனால் பெரும்பாலும் வாசு ஆபீஸுக்கு வந்து விடுவான். காரணம் […]
ஆர்னால்ட் ஃபைன் (அமெரிக்கா) நியூ யார்க்கில் இருந்து வெளிவரும் தி ஜுயிஷ் பிரஸ் இதழின் ஆசிரியர் ஆர்னால்ட் ஃபைன் 1984ல் எழுதிய ஒரு உண்மைக்கதை. மகா குளிரான ஒரு தினம். நான் வீடு திரும்புகிற வழியில் காலில் தட்டியது ஒரு மணிபர்ஸ். யாரோ தெருவில் தவறுதலாக தொலைத்திருக்கிறார்கள். கையில் எடுத்து விரித்துப் பார்த்தேன். அதன் சொந்தக்காரர் பற்றி எதும் துப்பு கிடைக்கலாம். ஆனால் அதில் வெறும் மூணு டாலர்கள் மாத்திரமே இருந்தன. கூட ஒரு கசங்கிய கடிதம். […]
நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணி 54. மறுநாள் திங்கட் கிழமை. காலை பத்துமணிக்கு அண்ணாநகர்வரை போகவேண்டியிருந்தது. நான்கு தினங்களுக்குமுன்பு புதுச்சேரி கடற்கரையில் சந்தித்த பிரெஞ்சு இளைஞர் குழு, தொண்டு நிறுவனமொன்றுடன் இணைந்து புதுச்சேரிக்கு மேற்கே ஒருகிராமத்திற்கு சமுதாய நலக்கூடம் கட்டித் தரவிருப்பதாக கூறியிருந்தார்கள். காலை எட்டுமணிக்கு எழுந்திருந்தபோது, கௌசல்யா அம்மா தோசைவார்த்துக்கொண்டிருந்தார். பல்துலக்கி குளித்து முடித்து, வழக்கம்போல ஒரு டெனிம், காட்டன் ஷர்ட் என்று தயாராகவும், மேசைக்கு தோசைதட்டு வந்தது. அவசர அவசரமாக தோசை விள்ளல்களை கார சட்டினியுடன் […]