-ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘சவ்வு மிட்டாய்க்காரனின் கை தட்டும் பொம்மை’ என்ற கவிதைத் தொகுப்பைத் தந்துள்ளார் உசிலம்பட்டிக்குப் பக்கத்து கிராமத்துக்காரரான திலீபன் கண்ணதாசன்; தற்போது மதுரைவாசி! நா.முத்துக் குமார், முகுந்த் நாகராஜ் போன்ற யதார்த்தக் கவிஞர்கள் வரிசையில் இவருக்கும் ஓர் இடம் உண்டு. கிராமத்தின் அழகை, ஜீவா சொன்னதுபோல ‘வேரோடும் வேரடி மண்ணோடும்’ எடுத்துவந்து நம்முன் கவிதைகளாகத் தந்துள்ளார். யதார்த்தக் கவிதைகளில் உண்மையே கவித்துவமாகச் செயல்படும். பாடுபொருள் முன்நிற்க மொழி பின்னால் நிற்கும். திலீபன் கண்ணதாசன் […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோடடை E. Mail: Malar.sethu@gmail.com 23.இறந்தபின் புகழ் பெற்ற ஏழை…… “மயக்கமா கலக்கமா ..மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா?” அடடா….வாங்க வாங்க..என்னங்க சோகமான பாட்டைப் பாடிகிட்டே வர்ரீங்க….எதுக்கு இப்படி..?….என்ன வீட்டுல ஏதாவது பிரச்சனையா…? இல்லை வேறெதுவும் உடம்புக்குச் சரியில்லையா…..?என்ன சொல்லுங்க… என்ன அமைதியா மொகத்த உர்ருன்னு வச்சுகிட்டு இருக்குறீங்க…. என்ன ஒண்ணுமில்லையா…? என்ன மனசே […]
(1998-ம் வருடம் என்று நினைக்கிறேன். Indian Council for Cultural Relations, இந்தியா சுதந்திரம் அடைந்து 50 வருஷங்கள் ஆனதை ஒட்டி, இந்திய மொழிகள் அனைத்திலும் காணும் இலக்கிய வளர்ச்சியைப் பற்றி எழுதப் பலரைக் கேட்டிருந்தார்கள். அத்தோடு ஒரு சில மாதிரி படைப்புக்களையும் மொழிபெயர்த்துத் தரச் சொல்லிக் கேட்டார்கள். தமிழ் மொழி வளர்ச்சி பற்றி எழுத என்னைப் பணித்திருந்தார், இதன் ஆசிரியத்வம் ஏற்ற ICCR இயக்குனர் திரு ஓ.பி. கேஜ்ரிவால். இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று […]
பிரேமா நந்தகுமார் விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று […]
சிலப்பதிகாரத்தின் கதைத்தலைவன் கோவலன் புகார் நகரை விட்டுப் பிரிந்து செல்கிறான். அதனால் அந்நகர மக்கள் வருந்துகின்றனர். இதற்கு உவமை கூற வந்த இளங்கோ அடிகள் இராமபிரான் அயோத்தியை விட்டுப் பிரியும் போது மக்கள் எவ்வாறு துன்பம் அடைந்தனரோ அதேபோல மக்கள் பெருந்துயருற்றனர் என்கிறார். “அருந்திறல் பிரிந்த அயோத்தி போல பெரும் பெயர் மூதூர் பெரும் பேதுற்றதும்” என்பன இளங்கோ எழுதிய பாடல் அடிகளாகும். பகவான் நாராயணனே வைகுந்தத்தின் மத்தியிலிருந்து அயோத்தியெனும் பாகத்தை […]
ரா.பிரேம்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி, தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர். முன்னுரை: ஒரு மொழியின்கண் உள்ள எழுத்தமைப்பு, சொல்லமைப்பு, தொடரமைப்பு போன்றவற்றை வரையறை செய்து விளக்குவது இலக்கணமாகும். இவ்விலக்கணத்தில் மொழியின் வளமை, மரபு மற்றும் கட்டமைப்பு வரையறைகளை விளக்குவதிலும் இலக்கணம் இன்றியமையாத இடம் வகிக்கிறது. உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்குமே இலக்கணக் கட்டுக்கோப்பும் வரையறையும் உண்டு. இவ்வாறு இல்லாமற் போயின் ஒருவர் பேசுவது இன்னொருவருக்குப் புரியாமல் போய்விடும். தென் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்த […]
-ஸ்ரீரங்கம் சௌரிராஜன் ‘வானம் தொலைந்து விடவில்லை’ என்ற கவிதைத் தொகுப்பை த.மு.எ.ச. சார்ந்த ஜீவி எழுதியுள்ளார். இதற்கு ‘சுகத்திற்காக… கவிதைக்காக’ என்ற தலைப்பில் கந்தர்வன் சிறிய அணிந்துரை தந்துள்ளார். உரைநடையை இவ்வளவு அழகாக எழுத முடியுமா? என்று வியப்பு தோன்றுகிறது. அம்மாவின் பொறுப்புணர்ச்சி, கிராம வாழ்க்கை அழகுடன் போட்டி போடுகிறது. கந்தர்வனின் தமிழ் விரல் நெருடலில் சிக்கிய பட்டுத்துணி போல நேர்த்தியாக உள்ளது. ‘இந்த ஒரு மாதத்தில் ரெண்டாயிரம் தடவையாவது அம்மா […]
1959 அல்லது 1960 ஆக இருக்கலாம். என்னைப் பார்க்க ஒருவர் வந்துள்ளதாக வரவேற்பறையிலிருந்து தொலைபேசித் தகவல் வந்தது. அப்போது அலுவலரிடம் சென்று வாய்மொழிக் கடிதம் வாங்கி எழுதுவது என் முறையாக இல்லாததால் எனது இருக்கையில் இருந்தாக வேண்டிய அவசியமின்றி நான் சற்றே ஓய்வாக இருந்தேன் எனவே, கீழ்த்தளத்தில் இருந்த வரவேற்பறைக்குப் போனேன். நான் மாடிப்படிகளில் இறங்கிக்கொண்டிருந்த போது, வரவேற்ப்றைக்கு மேற்கூரை இல்லாததால், அங்கிருந்தவாறே தலை உயர்த்தி என்னைப் பார்த்துவிட்ட ஓர் இளைஞர் புன்சிரிப்புடன் எழுந்து நின்று […]
ரமணி பிரபா தேவி கைக்கெட்டா நினைவுகளாகப் போய்விட்ட என் சிறுபிராயத்து, கிராமத்து மணம் வீசும் ஞாபகப்பெட்டகங்கள் இவை.. நினைவு தெரிந்தபின், ஊரினுள் வசிக்காததாலோ என்னவொ எனக்கு உறவினர்களை விடவும், இயற்கையின் மேல் ஒரு விதமான அன்பும் நேசமுமுண்டு . தொலைக்காட்சியிலேயே இளம்பருவத்தைத் தொலைத்திராக் காலகட்டமது. பெரும்பான்மையான பொழுதுகள் தோட்டத்திலே கழியும். முழுக்க முழுக்க நீர்ப்பாசனத்தாலான காலகட்டமாகையால் நெல் பாசனமுண்டு எங்கள் வயலில். சாலையிலிருந்து காணும்போதே கண்ணுக்கு குளிர்ச்சியளித்த பசுமையான நெல் நாற்றுகள் மனதினில் படமாய் […]
ஸ்ரீரங்கம் சௌரிராஜன். சக்திஜோதி கவிதைகளில் காதல், காமம், பெண்ணியம் மற்றும் தத்துவம் பேசப்படுகின்றன. இக்கவிதைகள் உயிர் எழுத்து, காலச்சுவடு, புதிய பார்வை, அவள் விகடன், சிக்கிமுக்கி.காம் எனப் பலவற்றில் வெளியாகியுள்ளன. மொழியைச் சாதாரணமாகவும், தனித்தன்மையுடனும் கையாளுகிறார். ஆங்காங்கே புதிய சிந்தனைகளும் காணப்படுகின்றன. ‘தேவ வார்த்தைகள்’ என்ற கவிதையில் நளினமும், எளிமையும் உயிர்ப்புடன் நல்லியல்புகளாகக் காணப்படுகின்றன. அவைதாம் தலைப்பாகியுள்ளன. பகலின் வெளிச்சத்தை மழைத் துளிகளை பூவின் வாசத்தை உயிரின் காமத்தைக் கடத்தும் இந்தக் காற்று சில நேரங்களில தானே […]