author

மணவாள  மாமுனிகள்  காட்டும்  சீர்மாறன்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

  வளவ.  துரையன் திருவாய்மொழி  நூற்றந்தாதி  என்பது  ஸ்ரீமத்  மணவாள  முனிகள்  அருளிச்  செய்துள்ள  பிரபந்தமாகும்.  அதில்  48-  ஆம்  பாடலை  மிக  முக்கியமானதாகக்  கருதுவார்கள்.அப்பாசுரம்  இதுதான். ”ஆராவமுதாழ்வார்  ஆதரித்த  பேறுகளைத் தாராமை  யாலே  தளர்ந்துமிக—தீராத் ஆசையுடன்  ஆற்றாமை  பேசி  அலமந்தான் மாசறு  சீர்மாறனெம்  மான்” இப்பாசுரத்தில்  நம்மாழ்வாரை  “மாசறு  சீர்மாறன்”  என்று  மணவாள  மாமுனிகள்  குறிப்பிடுகிறார்.  மேலும்  இப்பாசுரம்  திருவாய்மொழி  ஐந்தாம்  பத்தின்  எட்டாம்  திருவாய்மொழிப்  பாசுரங்களின்  பொருள்களைச்  சுருக்கமாக  எடுத்துக்  கூறுகிறது. இப்பாசுரத்துக்கு  பிள்ளைலோகம்  […]

திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்

This entry is part 1 of 24 in the series 8 ஜூன் 2014

வளவ.துரையன் பெருமாள் குடிகொண்ட கோயில்களில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோயில்கள் இருக்கும் தலங்களைத் திவ்ய தேசங்கள் என்று வழங்குவர். அவை மொத்தம் 108 ஆகும். அவற்றில் பாண்டிய நாட்டுத் திவ்ய தேசங்கள் என்று 18 திருக்கோயில்களைக் கூறுவர். அங்கு ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள 9 கோயில்களை நவதிருப்பதிகள் என்று வழங்குவர். அவற்றுள் திருக்கோளூர் எனும் பெயர் பெற்ற திவ்யதேசம் மிக முக்கியமான ஒன்றாகும். இது ஆழ்வார் திருநகரிக்குத் தென்கிழக்கே சுமார் இரண்டு கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. […]

சுந்தோப சுந்தர் வரலாறு

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

வளவ. துரையன் கம்பராமாயணத்தில் கிட்கிந்தாகாண்டம் வாலி வதைப் படலத்தில் ஒரு பாடல் உள்ளது. வாலியும் சுக்ரீவனும் போர் புரிவதைக் கம்பர் அப்பாடலில் கூறுகிறார். “தந்தோள் வலிமிக்கவர் தாமொரு தாய்வயிற்றின் வந்தோள் மடமங்கை பொருட்டு மலைக்க லுற்றார் சிந்தோ[டு] அரியொண்கண் திலோத்தமை காதல்செற்ற சுந்தோப சுந்தப்பெயர்த் தொல்லையி னோருமொத்தார்” [கிட்காந்தா காண்டம்—274] இப்பாடலில் கம்பர் உவமையாகக் கூறும் ஒரு வரலாறு அவர்தம் புராண அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இப்பாடலின் பொருளைப் பார்ப்போம். ”தமது தோள்வலியால் மிக்கவர்களும், ஒருதாயின் […]

இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம் { நிகழ்ச்சி எண்—-147 }

This entry is part 1 of 26 in the series 1 ஜூன் 2014

இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம் { நிகழ்ச்சி எண்—-147 } நாள் : 08—06—2014, ஞாயிறு காலை 10 மணி இடம்: ஆர்.கே.வீ தட்டச்சகம், முதன்மைச்சாலை தலைமை உரை ; திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை : முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை சிறப்புரை : முனைவர் திரு க. நாகராசன், புதுவை பொறியியல் கல்லூரி பொருள் : சாகித்திய அகாதெமி விருது பெற்ற ”கொற்கை” நன்றியுரை : திரு […]

மாயன்  மணிவண்ணன்

This entry is part 1 of 29 in the series 25 மே 2014

  வளவ. துரையன் நாயகனாய்நின்றநந்தகோப[ன்]னுடைய கோயில்காப்பானேகொடித்தோன்றும்தோரண வாசல்காப்பானேமணிக்கதவம்தாள்திறவாய் ஆயர்சிறுமியரோமுக்கறைபறை மாயன்மணிவண்ணன்நென்னலேவாய்நேர்ந்தான் தூயோமாய்வந்தோம்துயிலெழப்பாடுவான் வாயால்முன்னமுன்னம்மாற்றாதேயம்மாநீ நேசநிலைக்கதவம்நீக்கேலோரெம்பாவாய் இதுதிருப்பாவையின்பதினாறாம்பாசுரமாகும். இதற்குமுன்உள்ளபத்துப்பாசுரங்களிலும்தங்கள்இல்லத்தின்உள்ளேஉறங்கிக்கொண்டிருக்கும்பத்துப்பெண்களைஎழுப்பியதாகக்கூறப்பட்டுள்ளது. இதன்மூலம்ஆயர்பாடிச்சிறுமிகள்அனைவரையும்எழுப்பியதாகக்கொள்ளலாம். இதுஆச்சார்யசம்பந்தத்தைஉண்டாக்கபுருஷகாரமாய்இருப்பவர்களைஉணர்த்தும்பாசுரம். இதுமுதற்கொண்டு 7 பாசுரங்களில்எல்லாப்பெண்களும்வந்துவாசல்காக்கும்முதலிகளையும், நந்தகோபர், யசோதை, பலராமன், நப்பின்னைப்பிராட்டி, முதலியவர்களைமுன்னிட்டுக்கொண்டுகண்ணபெருமானைஎழுப்புகிறார்கள். முதலிலேயேஇவர்கள் ’செய்யாதனசெய்யோம்’ என்றுகூறியிருக்கிறபடியால்இப்போதுபாகவதர்களைக்கொண்டுபகவானைப்பற்றநினைக்கிறார்கள். ”வேதம்வல்லார்களைக்கொண்டுவிண்ணோர்பாதம்பணிந்து” என்றுநம்மாழ்வார்அருளிச்செய்திருப்பதுஇங்குநினைக்கத்தக்கது. பாஞ்சராத்ரசாஸ்திரத்திலும்பெருமாளின்திருக்கோயிலுக்குச்சேவிக்கச்செல்லும்போதுஅச்சன்னதியின்திருவாசல்காவல்புரியும்முதலிகளிடம்அனுமதிபெற்றுத்தான்செல்லவேண்டும்என்றுகூறப்பட்டிருக்கிறது. ஆயர்குடிச்சிறுமிகள்அதைஅறியார்களானாலும்ஸ்ரீவைஷ்ணவகுடியிலேவந்தவர்களாதலின்இந்தஅனுஷ்டானம்அவர்களிடம்இயற்கையாகவேகுடிகொண்டுள்ளதுஎன்றுகொள்ளலாம். மேலும்பகவத்சம்பந்தத்தால்உண்டானபிறப்பு, முக்திக்குக்காரணமானகல்வி, பகவத்கைங்கர்யமானகர்மம்ஆகியபெருமைகள்யாரிடம்காணப்படுகிறதோஅவர்கள்அனைவரும்சேவிக்கத்தக்கவர்கள்ஆவர். இந்தஆய்பாடிப்பெண்கள்செய்வதெல்லாமேஅனுஷ்டானமாகிறது. ‘ரஸவாதம்கைப்பட்டவன்இருந்தஇடமெல்லாம்பொன்னாமாப்போலேபகவானிடம்ப்ரேமைகொண்டவர்கள்சொல்லும்எல்லாமேவார்த்தையாம்’என்றுநஞ்சீயர்நம்பிள்ளைக்குஅருளியதுஇங்குநினைவுகூறத்தக்கது. சூர்ப்பனகைபாகவதர்களைப்பற்றாமல்நேரேபகவானைப்பற்றமுயன்றதால்படாதபாடுபட்டாள். விபீஷணன்நேராகஸ்ரீராமனிடம்செல்லாமல் ”நான்வந்திருப்பதைஎம்பெருமானுக்குத்தெரிவியுங்கள்” என்றுகூறிச்சென்றதைநினைவுகூறவேண்டும். ‘வில்லிபுதுவைவிட்டுசித்தர்தங்கள்தேவரைவல்லபரிசுவருவிப்பரேல்அதுகாண்டுமே” என்றுஅருளியபெரியாழ்வாரின்திருமகளன்றோஆண்டாள்நாச்சியார். அடுத்துஇவர்கள்நாயகன்என்றுகுறிப்பிடுகிறார்கள். உலகுக்கோர்தனிநாயகனாய்ஏழுலகும்தனிக்கோல்செல்லஆற்றல்மிக்கபெருமான்கண்ணன். மேலும்அவன்நாயகனாய்நின்றுசலித்துப்போய்இங்குஎளிமையாய்வந்துள்ளான். ஆனால்இங்குநாயகன்என்றவிளிநந்தகோபனைக்குறிப்பிடுகிறது. நந்தகோபன்எப்படிநாயகன்ஆவான்? நந்தகோபன்மிகவும்பெருமைஉடையவன். என்னபெருமைஎன்றால்பகவானையேபிள்ளையாகப்பெற்றவன். எல்லாஉலகத்தையும்ஆளும்எம்பெருமான்அவன்முன்கைகட்டிநிற்பாரன்றோ? மேலும்கண்ணனுக்கும்நாயகனன்றோஅவர்.       கிருஷ்ணனுக்கும்நாயகன்நந்தகோபன்தானே! மேலும்நந்தகோபனைமிகச்சிறந்தஆச்சாரியனாகஇச்சிறுமிகள்எண்ணுகிறார்கள். ஆச்சாரியசம்பந்தத்தோடுதான்பகவானைஅணுகவேண்டும். பெருமாளையேநமக்குஉபதேசிக்கும்ஆச்சாரியன்குருவாகிறார். அவர்பகவானைக்காட்டிலும்பெரியவர்தானே? […]

தனியே

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

    இருட்டுப் போர்வையைத் தரை போர்த்திக் கொள்கிறது   எம்மை அணைக்க யாரும் இல்லையென இலைகள் கேவின   வியர்வை ஆறுகள் மறையும் மந்திரம் தேடினர் மாந்தர்கள்.   அணு அனல் நீரால் வரும் சக்தி வாசல்களும் அனல்கள் கக்கின   ஒரே ஓர் அசைவு போதுமென உச்சிக் கழியில் கொடி கூக்குரலிட்டது   புகை போக்கிகளோடு நேர்க்கோடொன்றாய் புகையும் நிற்கிறது   கடைசியில் வந்த காற்று கவிதையில் அடங்காத சொல்லெனத் தனியே போனது

புள்ளின்வாய்கீண்டான்

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

வளவ. துரையன் புள்ளின்வாய்கீண்டானைப்பொல்லாஅரக்கனைக் கிள்ளிக்களைந்தானைக்கீர்த்திமைபாடிப்போய் பிள்ளைகளெல்லாரும்பாவைக்களம்புக்கார் வெள்ளிஎழுந்துவியாழமுறங்கிற்று புள்ளுஞ்சிலம்பினகாண்போதரிக்கண்ணினாய் குள்ளக்குளிரக்குடைந்துநீராடாதே பள்ளிக்கிடத்தியோபாவாய்நீநன்னாளால் கள்ளந்தவிர்ந்துகலந்தேலோரெம்பாவாய். இஃதுஆண்டாள்நாச்சியார்அருளிச்செய்ததிருப்பாவையின்பதின்மூன்றாம்பாசுரம். இப்பாசுரத்தில்போதரிக்கண்ணினாய்’ என்றுகூப்பிடுவதிலிருந்துதன்கண்ணழகைக்கொண்டுகர்வம்கொண்டும்கிருஷ்ணன்தான்நம்மைத்தேடிவரவேண்டுமேதவிரநான்அவனைத்தேடிச்செல்லவேண்டியதில்லைஎன்றும்உள்ளேகிடப்பவளைஎழுப்புகிறார்கள். கடந்தபதின்மூன்றாம்பாசுரத்தில்  ’மனத்துக்கினியான்என்றுஇராமன்பெருமைபாடினீர்களே’என்றுஅவள்கேட்கிறாள். உடனேஅவர்கள்முன்பு’இராமனையும்சொன்னோம்; கண்ணனையும்சொன்னோம்இப்போதுஇருவரையும்சேர்த்துப்பாடுகிறோம்’என்கிறார்கள். மேலும்கண்ணனும்இராமனும்ஒன்றுதானே? யசோதைகண்ணனைஅழைக்கையில்இராமனைக்கூப்பிடுவதுபோல்; ”வருகவருகவருகவிங்கேவாமனநம்பீ வருகவிங்கேகரியகுழல்செயவாய்முகத்தென் காகுத்தநம்பீவருக’              என்றுதானேஅழைக்கிறாள். ஆயர்சிறுமிகள்  தங்கள்சிற்றிலைக்கண்ணன்சிதைக்கவருகையில், “சீதைவாயமுதம்உண்டாய்எங்கள்சிற்றில்சிதையேல்”  என்றுதானேஇராமன் பெயர்சொல்லிவேண்டுகிறார்கள். பொய்கையில்வஸ்திராபகரணம்செய்தபோதுகோபியர்கள் “இரக்கமேன்ஒன்றும்இலாதாய் இலங்கைஅழித்தபிரானே’  என்றுதானேமுறையிடுகிறார்கள். எனவேநாம்இருவரையும்இணைத்துப்பாடுவோம்எனஎண்ணுகிறார்கள். அதனால்தங்கள்குலதெய்வமானகண்ணனைமுதலில் ‘புள்ளின்வாய்கீண்டான்’ என்கிறார்கள். இங்குகொக்குவடிவில்வந்தஅசுரனின்கதைபேசப்படுகிறது. கம்சனால்ஏவப்பட்டபகன்எனும்அசுரன்கொக்கின்வடிவம்எடுத்துக்கண்ணனைவிழுங்கவந்தான். கண்ணன்அதன்வாயைக்கிழித்துஅவனைமாய்த்தான்.  பெரியாழ்வாரும்இதை, ‘பள்ளத்தில்மேயும்பறவையுருக் கொண்டு கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு புள்ளிதுவென்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட’ என்று அருளிச் செய்வார். பொதுக்கோ […]

சுட்ட பழங்களும் சுடாத பழங்களும்

This entry is part 1 of 25 in the series 20 ஏப்ரல் 2014

[ புதிய மாதவியின் ‘பெண் வழிபாடு” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] மும்பையை வசிப்பிடமாகக் கொண்ட புதிய மாதவி நவீன இலக்கியத்தில் ஒரு முக்கியமான இடத்தை வகிப்பவர். கவிதை, சிறுகதை, விமர்சனம் என பல வகையான தளங்களில் இயங்கி வருபவர்.  ‘பெண் வழிபாடு’ எனும் அவரது சிறு கதைத் தொகுப்பு அண்மையில் வெளி வந்துள்ளது. இத்தொகுப்பில் பல்வேறு தளங்களில் இயங்கும் கதைகள் இடம் பெற்றிருப்பதால் வாசிக்கக் களைப்பில்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். பெண் தலைமை தாங்கும் […]

”செல்வப் பெண்டாட்டி”

This entry is part 1 of 24 in the series 6 ஏப்ரல் 2014

  கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து, செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும், குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே, புற்றர வல்குல் புனமயிலே! போதராய், சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து, முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி,நீ எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்! திருப்பாவையின் பதினோராவது பாசுரம் இது. இந்தப் பாசுரத்திற்கும் இதற்கு அடுத்த பன்னிரண்டாம் பாசுரத்திற்கும் தொடர்பு உண்டு. இப்பாசுரம் கடமையைச் செய்வதைக் காட்டுகிறது என்றால் அடுத்த பாசுரம் தன் கடமையைச் […]

பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

”ஜரகண்டி”எனும் தலைப்பில் ஒரு சிறுகதை. மிகவும் எள்ளலானது. அரசு விழாக்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவது. ‘ஜரகண்டி’ என்ற சொல் மிகவும் பிரபலமானதாகும். முன்கூட்டிப் பதிவு செய்து திட்டமிட்டுத் திருமலை அடைந்து பதினைந்து மணி நேரம் அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுப், பெருமாளருகில் சென்று தரிசிக்கும் போது காதில் ஒலிக்கும் குரல் ஜரகண்டி. அதைச் சொல்லிக் கொண்டே நம்மை இழுத்து அப்புறப் படுத்தி விடுவார்கள். இதை அப்படியே ஒப்பிட்டு எஸ்ஸார்சி எழுத்தாளர் ஒருவர் அரசு விருது வாங்கும் விழாவுக்குச் […]