அதிகாலையிலேயே மழை ஆரம்பித்துவிட்டது காலையில் செய்வதற்கு ஒன்றுமில்லை சாப்பிடுவதைத் தவிர விடுவிடுவென ஓடிப்போய் கதவைத் திறந்தேன் நினைத்தது போல் நடந்துவிட்டது நாளிதழ் மழைநீரில் தொப்பலாக நனைந்துவிட்டது புத்தக அலமாரியைத் திறந்தால் சுவரெல்லாம் ஓதம்காத்துப் போய் புத்தகத்தின் அட்டை நமுத்துப் போயிருந்தது கதவெல்லாம் அடைத்துவிட்டேன் நொடிமுள் நகரும் சப்தம் மட்டும் கேட்டது நத்தை போல் நகர்ந்து கொண்டிருந்தேன் மரணத்தை நோக்கி காத்திருத்தலே ஒரு தவமல்லவா மாத்திரை மருந்துகள் எத்தனை நாள் கட்டுப்படுத்தும் சித்ரவதையாகத் தான் இருக்கிறது மருத்துவரைக் கேட்டால் […]
தூக்கிப் போட்ட சிகரெட்டுக்காக கைதட்டத் துவங்கியதிலிருந்து ஊழலுக்கெதிராக போராடுபவர்களை நிராகரிக்கவும் குற்றங்களுக்கெதிரான தண்டனைகளை தவிர்த்துவிடபோராடவும் தானே கற்றுக் கொள்ளுகிறது பின்னவீனத்துவ சமூகக் குழந்தை இனப்பற்றுக் கான போராட்ட அடையாளம் மொழியைக் காப்பாற்றுவதில் தொடங்கி குற்றங்களுக்காதரவாக போராடுவது வரை நீளுகின்றது. உணர்வாளர்களை அறிவுத் தளத்தில் யோசிக்க விடாமலிருப்பதை முன்பெல்லாம் இந்தியாவை வெல்ல நினைத்தவர்கள் செய்தார்கள். இப்பொழுது நாமே நமக்கு சூன்யம் வைத்துக் கொள்கின்றோம் பாவம் இவர்கள் இன்னது செய்கிறோமென்று அறியாதவர்கள் தனித்த அடையாளங்களுக்காக பொதுமை நியாயங்களை நிராகரிப்பவர்கள்
எதுவும் தொலைந்திருக்கவில்லை. எனது நாட்கள் பத்திரமாகவே இருக்கின்றன. காலை மாலை இரவு எனச் சூ¡¢யன் சொல்லி வைத்தபடி நகரும் நேரங்களில் எனக்குக் கெட்டுப்போனது எதுவுமில்லை என்றாலும் செய்தித்தாள்களிலும் புத்தகங்களிலும் சாயமிழந்த வார்தைகளில் என்னதான் தேடிக்கொண்டிருப்பது? ஆனால் கணேசனுக்கு வந்தது போலக் கண்ணுக்குள் இருள் சேர்த்துத் தேடிய கலர்க்கனவுகள் கிடைக்கவில்லை. செய்தியோ உணர்வோ ஒன்றை ஜாலமாய் ஒளித்து வைத்து தேடிகொள் என்று சொல்லும் கவிதையும் கிடைக்கவில்லை. எண்ணங்கள் அற்றுப்போய் நெற்றியில் சுடர்தாங்கி பேருண்மை தேடலாம் என்றிருந்தால் புற்றிலிருந்து புறப்பட்ட […]
முத்தமொன்றில் மிதந்து வந்தது தேனீச்சையொன்று இலைகளின் பச்சையை உடலெங்கும் பூசிய நிர்வாணத்தின் முன் அது மயங்கிக் கிடந்தது விரக தாப வலி பொங்கி விம்ம ஸபாமர்வா தொங்கோட்டம் ஓடி களைத்துப் போன அதன் இருப்பு மெல்லிதழ்களின் வருடலுக்காய் யாசித்து தன் தவாபை தொடர்ந்தது. மூச்சுக்கும் மூச்சுக்குமிடையே பிறந்ததொரு அதிசயக் களிப்பில் தேன்மணத்தை நாவால் தடவி வனாந்திர வெளியில் நீந்திச் சென்று சுவனத்தின் வாசலைத் தீண்டியது. கூடடைய வழியுண்டா முத்தமென்பதை மரணமென்று புரிந்து கொள்ள தேனீச்சைக்கு அனுபவம் போதவில்லை.
. * சலுகையோடு நீட்டப்படும் கரங்கள் பெற்றுக் கொள்கின்றன ஒரு கருணையை மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள் அடையத் துடிக்கின்றன இறுதி தரிசனத்தை இருப்புக்கும் இன்மைக்குமான பெருவழியில் சுவடுகளாகிறது திரும்புதலின் பாதையும் காத்திருந்து எரியும் தெருவிளக்கும் ***** –இளங்கோ ( elangomib@gmail.com )
கவிதை எழுத அமர்ந்த நான் அதோடு மளிகைக்கடைக்கும் சேர்த்து லிஸ்ட் எழுதிக்கொண்டிருந்தேன் முக்கியமானவை , உடனடித்தேவைகள் முதலில் வைக்கப்பட்டன கொஞ்சம் இருப்பு உள்ளது,பரவாயில்லை வகைகள் அடுத்து இடம் பிடித்தன இன்னும் கொஞ்ச நாளைக்கப்புறம் தேவைப்படுபவை பின் தங்கின எப்போதும் இடம் பிடிப்பவை என்னாலேயே வரிசையின் கடைசியில் எழுதப்பட்டன. எழுதியவை அனுப்பப்படும் இடங்கள் எப்படியோ தவறுதலாக மாறி விட்டது உடனே ஒன்று திரும்ப வந்து விட்டது இன்னொன்றுக்காக காத்திருந்தேன் அது வெளிவந்து விட்டது. – சின்னப்பயல் ( chinnappayal@gmail.com […]
அந்தி வெளிச்சம் வருகிறது..! காற்றே வழிவிடு ஆயிரங்கொண்டலோடி வருகிறது… மின்மினிப் ப+தமாய் சூரியன் மறைகிறான் சிவந்த கனல்களால் விண்ணிலே உரசுகிறான்… மேற்கிலே உலை மூட்டுகிறான் மேக கணங்களும் தீப்பிடிக்கின்றன… அந்தி வெளிச்சம் வருகிறது காற்றே வழிவிடு! அவசரமாய் மறைந்து விடப்போகிறது… கதிரவனின் தோல் உரிந்து விட்டதோ? கடலும் படம் எடுக்கிறது ஓசை படாமல் ஒப்பாரி வைக்கிறது… அந்தி வெளிச்சம் வருகிறது… ஆனால் சூரியன் மறைகிறது… சூரியன் மறையும் போதும சுகமான வெளிச்சங்கள்… ஜுமானா ஜுனைட், இலங்கை.
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மெழுகு வர்த்தி வெளிச்சம் விரிந்து பரவி விரைவாய் என்னை விழுங்கி விட்ட தென்ன ? திரும்பி வா என்னரும் நண்பா ! நாம் காதலிக்கும் வழிமுறைகள் வடிக்கப் பட்டவை அல்ல ! எதுவும் உதவா தெனக்கு அழகத்துவம் தவிர ! என் ஆத்மா உன் ஆத்மா விடம் ஏதோ ஒன்றைக் கேட்ட காலைப் பொழு தொன்று நினைவுக்கு வருகிறது ! நீர் அருந்தினேன் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “வாழ்க்கை என்பது வெவ்வேறு இணைப்புகள் பல பின்னிய ஒரு சங்கிலிப் பிணைப்பு. துயரம் என்பது தற்காலத்துக்கும், நம்பிக்கை உறுதி ஊட்டும் எதிர்காலத்துக்கும் உள்ள ஓர் பொன்னிணைப்பு.. அது தூங்குவதற்கும் விழிப்பதற்கும் இடைப்பட்ட ஓர் எழுச்சி.” கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்) விரிந்த அறிவும் விவேக நியாயமும் வாழ்க்கை அனுபவமும் இல்லாமல் எப்படி என்னை நான் மதிப்பிடு வேன் மனிதரின் ஒரு மந்திரியாய் […]
ஒரு பொன்மாலைப்போழுதிலான பேருந்துப்பயணம்,தோழியுடன்.. வெட்டிக்கதைகளுக்கிடையே அலறிய அவளது அலைபேசியில் பிரத்யேக அழைப்பொலியும் முகமொளிர்ந்து வழிந்த அவள் அசட்டுச்சிரிப்பும் சொல்லாமல் சொல்லின எதிர்முனையில் யாரென்று! இங்கிதம் தெரிந்தும் எங்கும் நகர முடியாத தவிப்பு.. மூடிகளில்லா காதுகளைப்படைத்த இயற்கையை நொந்தபடி கைகள் துழாவுகின்றன என் ஜீன்ஸின் பாக்கெட்டை.. கிடைத்துவிட்டது செயற்கை மூடி.. என் இயர்போன்ஸ் காப்பற்றிவிட்டது, ‘ம் இப்போ வேணாம்.. அப்புறமா…’ -களிலிருந்து அவளையும் ‘சிவபூஜைக்குள் கரடி’ என்றும் இன்னும் பலவாறும் திட்டப்படுவதிலிருந்து என்னையும்!!