தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

விஸ்வரூபம் – கலைஞன் எதைச் சொல்வது எதை விடுவது ?

மீண்டும் மீண்டும் கலைஞனின் முன்னுள்ள கேள்வி எதைச் சொல்வது எதை விடுவது என்பது பற்றித்தான். இந்தக் கேள்வி கலைஞனின் முன்னாள் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் முன்னாலும் உள்ளது. ஒரு விமர்சகனின் அணுகுமுறை ஏன் இது…

நீங்காத நினைவுகள் -4

மே மாதம் 27 ஆம் நாள் நம் நாட்டுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த மறக்க முடியாத நாளாகும். மிகவும் துயரமான நாள். 1964 ஆம் ஆண்டின் மே மாதத்து 27 ஆம் நாளன்று தான்…

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)  முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 8.சமுதாயத்திற்கு வழிகாட்டிய ஏ​ழை…… என்னங்க….​யோசிச்சிகிட்​டே இருக்கிறீங்க…அவங்க இந்த சமுதாயத்​தை​யே…

செம்பி நாட்டுக்கதைகள்……

மஹ்மூது நெய்னா உங்க ஊருக்கு எத்தனை பேருதான்யா? நீங்க பாட்டுக்கு வகை தொகை இல்லாம சொல்லிக்கிட்டே போனா எப்படி? நான் லீவுக்கு ஊருக்கு வந்ததை எப்படியோ அறிந்து, புதுக்கோட்டையிலிருந்து , என்னை பார்க்க, கீழக்கரை…

நீராதாரத்தின் எதிர்காலம்

தேமொழி   நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவம்.  உலகின் பெரும்பான்மைப் பகுதி நீரினால் சூழப்பட்டிருந்தாலும் உயிரினங்கள் வாழத் தேவையான நீராதாரத்தின் பற்றாக்குறை இந்த நூறாண்டின் தலையாயப் பிரச்சனையாகவே இருப்பதை நாம் யாவரும் அறிந்துள்ளோம்.…

தமிழ்க்கல்வி சிறக்க பரிந்துரைகள் சில

தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,சிவகங்கை. உலகம் முழுவதும் தமிழ் பரவியிருந்தாலும், தமிழர் பரவியிருந்தாலும் தமிழுக்கு எங்கும் இரண்டாம் இடம் என்பதே தற்கால நிலைப்பாடாகும். பொருள் சார்ந்து இயங்கும் இந்த உலகத்தில் படிப்பை…

புத்தக அறிமுகம் – முல்லைப் பெரியாறு அணை – வரலாறும் தீர்வும்

முல்லைப் பெரியாறு அணை - வரலாறும் தீர்வும் என்றொரு புத்தகம் வந்திருக்கிறது. வேளாண் பொறியியல் துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றி கண்காணிப்புப் பொறியாளராக 2004 ல் பணி நிறைவு பெற்ற இவர் மதுரை தானம்…

புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம்

A.P.G சரத்சந்திர தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி…

காந்தி மேரி – தெரிந்த முகத்தின் புதிய அறிமுகம்

காந்தி மேரியை நான் முதலில் பார்த்தது தில்லியில் 1987-ல். இருபத்தாறு வருடங்களுக்கு முன். தில்லியில் நிரந்தரமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் கண்காட்சித் திடலில் (Exhibition Grounds). நான்கைந்து நிரந்தர திறந்த வெளி  அரங்குகள் உண்டு. அவற்றில்  ஒன்றான,…

மக்கள் நல வாழ்வுக்கான தேவையும் அளிப்பும்

  எழுத்தறிவித்தல் நாடு முழுவதும் சர்வ சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் 7 லட்சத்துக் கும் அதிகமான ஆசிரியப் பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டதாக 24.11.2012 தினமணி இதழில் செய்தி வெளியாகியிருந்தது.…

அறிவியல் தொழில்நுட்பம்

மெனோபாஸ்

  டாக்டர் ஜி.ஜான்சன் மெனோபாஸ் என்பது என்ன? மாதவிலக்கு நின்று 12 மாதங்கள் ஆகிவிட்டால் அதை மெனோபாஸ் என்கிறோம். சராசரியாக பெண்கள் 51 வயதில் இதை அடைகிறார்கள். ஆனால் 45 முதல் 55 வயதிலும்…

வாய் முதலா? வட்டக்குதம் முதலா?

-ராஜூ சரவணன் 2011 இறுதியில் கேரளாவின் விழிஞ்ஞத்தில் அமைந்திருக்கும் Cental Marine Fisheries Research Institute சென்டருக்கு செல்ல வேண்டிய வேலை ஏற்பட்டது. கர்நாடகாவின் கார்வாரில் கடலடித்தரை உயிரினங்களைப் (benthos) பற்றிய ஆய்விற்கு பயிற்சி…

ஆண்டாண்டு தோறும் பருவ காலத்தில் அமெரிக்க மாநிலங்களைத் தாக்கிப் பேரழிவு செய்யும் அசுரச் சூறாவளிகள் [Tornadoes]

ஆண்டாண்டு தோறும் பருவ காலத்தில் அமெரிக்க மாநிலங்களைத் தாக்கிப் பேரழிவு செய்யும் அசுரச் சூறாவளிகள் [Tornadoes]     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Pt5JlFVhSqg  [New HD 2013 Tornado video compilation -…

இலக்கியக்கட்டுரைகள்

நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல்

அசோகனின் வைத்தியசாலை - கருணாகரன் நோயல் நடேசனுடைய “அசோகனின் வைத்தியசாலை“ என்ற புதிய நாவல் அவருடைய Noelnadesan’s Blog என்ற இணைத்தளத்தில் தொடராக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இணையத்தில் இந்த நாவல் பிரசுரமாவதற்கு முன்பு, முழுமையாக…

தியத்தலாவ எச்.எப் ரிஸ்னாவின் “இன்னும் உன் குரல் கேட்கிறது”

  மொழிவரதன்   புரவலர் புத்தகப் பூங்காவின் 30 ஆவது வெளியீடாக வந்துள்ள தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் ``இன்னும் உன் குரல் கேட்கிறது'' கவிதைத் தொகுதி என் கரம் கிட்டியது.   அழகான முகப்பு…

எழிலரசி கவிதைகள்

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் 1968-ல் ராணிப்பேட்டையில் பிறந்த எழிலரசி தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது நாமக்கல் பள்ளி ஒன்றில் தமிழாசிரியையாக இருக்கிறார். இவரது முதல் கவிதைத் தொகுப்புதான் 'மிதக்கும் மகரந்தம்' இதில் 44 கவிதைகள்…

அழியாத காதலின் ஆலயம் – நூல் விமர்சனம்

  குமரி எஸ். நீலகண்டன். இதுவென்று எதுவுமில்லை. எதிலும் இது இல்லை. எனதென்று உலகில் எதுவுமில்லை. உனதென்று உலகில் ஒன்று மில்லை.. ஒன்றுமில்லா உலகத்தில் பேருருவுடன் பெருத்த புன்னகையுடன் காத்திருக்கிற ஒன்று அன்பு. பலருக்கும்…

SECOND THOUGHTS [ஸெகண்ட் தாட்ஸ்] கவிஞர் நீலமணியின் ஆங்கிலக் கவிதைத்தொகுப்பு

கடந்த 55 ஆண்டுகளாக கவிதை எழுதிவருகிறவர் கவிஞர் நீலமணி. தமிழ் சிறுபத்திரிகைகளுக்கு நன்கு அறிமுகமானவர். சமூகவுணர்வு மிக்க அதேசமயம் கவித்துவம் குறையாத கவிதைகளை கணிசமான எண்ணிக்கையில் எழுதியிருப் பவர். அவருடைய கவிதைகளில் நிறைய நீள்கவிதைகளும்…

கடிதங்கள் அறிவிப்புகள்

திருக்குறள் முற்றோதல் நிறைவு விழா அழைப்பிதழ்

கம்பன் உறவுகளே வணக்கம்! திருக்குறள் முற்றோதல் நிறைவு விழா அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன்! அனைவரும் வருகைதந்து சிறப்பிக்கவும் அன்புடன் கவிஞா் கி. பாரதிதாசன் தலைவா் கம்பன் கழகம் பிரான்சு  

கதைகள்

வேர் மறந்த தளிர்கள் 3

3 சிறிய குடும்பம் மூவர் கொண்டது அவனது சிறியக் குடும்பம்.பெற்றோருக்கு ஒரே பிள்ளை பார்த்திபன். அவனைத் தவிற அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்தக் காலை வேளையில் வீடு மிகவும் அமைதியுடன் காணப்படுகிறது.அறையின் சன்னல்…

வளைக்காப்பு

டாக்டர் ஜி. ஜான்சன் வழக்கம்போல் வெளிநோயாளிப் பிரிவு " பசார் மாலாம் " போன்று பரபரப்புடனும், பெரும் இரைச்சலுடனும் இயங்கியது . காலை மணி பனிரெண்டைத் தாண்டியபோதும் காத்திருக்கும் கூட்டம் நீர்த்தேக்கம் போன்றே நிறைந்திருந்தது.…

அக்னிப்பிரவேசம்-35 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பதினைந்து நாட்களாய் பீடி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தது. பாவனாவின் தொகுதியில் சில ஆயிரக்கணக்கான பீடி தொழிலாளர்கள் வசித்து கொண்டிருந்தார்கள்.’அதில்…

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 11

ஜோதிர்லதா கிரிஜா தயா தன் அலுவலகத்துள் நுழைந்து, பிரிவுக்குள் சென்றடைந்த போது, சங்கரன் ஏற்கெனவே வந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். மணி ஒன்பதரை கூட ஆகியிருக்கவில்லை யாதலால், வேறு யாரும் வந்திருக்கவில்லை. இருவருக்கும் பக்கத்துப் பக்கத்து…

டெஸ்ட் ட்யூப் காதல்

புவனாவா அது... துணிக்கடையின் கண்ணாடியில் தெரிந்த அந்த உருவத்தைப் பார்த்து ஒரு தரம் தன்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டான் பிரதீப். அவனுக்குள் கொழுந்து விட்டு எரிந்த கோபக்கனல் அவளைப் பார்த்ததும் எரிமலைக் குழம்பாய் கொதித்து…

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -3

வேதாளத்தின் மாணாக்கன் (The Devil's Disciple) அங்கம் -3 பாகம் -3   மூன்று அங்க நாடகம்   ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன்,…

போதி மரம் பாகம் இரண்டு – புத்தர் அத்தியாயம் – 21

  பிம்பிசாரரின் அரண்மனையில் ராஜசபை கூடியிருந்தது. மன்னருக்கு அடுத்து ராஜ குரு, பிரதான அமைச்சர், மற்ற மந்திரிகள், படைத்தலைவர் என இருக்கும் வரிசை அப்படியே இருந்தது. மன்னருக்கு இணையான ஆசனம் ஒன்று இருக்காது. இன்று…

ஜங்ஷன்

எஸ்.எம்.ஏ.ராம் சின்ன ஜங்ஷன். இங்கிருந்து இரண்டு கிளைகள் வெவ்வேறு திசைகளில் பிரிவதால் இது ஜங்ஷனாயிற்று. பிரிந்தாலும் ஜங்ஷன்; சேர்ந்தாலும் ஜங்ஷன். உயரத்திலிருந்து பார்த்தால் பிரிதல் சேர்தல் எல்லாம் ஒன்று தான். ஒரே புள்ளி. அதில்…

டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 7

  அந்த பிரம்மாணடமான லட்சுமி பில்டிங்க்ஸின் ஆறாவது தளத்தில் கௌரி லிப்ட் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவதற்கும் முன்பாக அவள் போட்டுக் கொண்ட "ப்ளூ லேடி "சென்டின் மென்மையான மணம் அவளைத் தாண்டிக்…

குரங்கு மனம்

  "அருந்ததி, அம்மா சாப்பிட்டாங்களா? எங்கே ஆளையேக் காணோம்” “இல்லப்பா, எங்கப்பா நேரத்துக்குச் சாப்பிடறாங்க.. என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. அழுதுகிட்டே இருக்காங்க. இன்னும் உங்கப்பா செத்த அதிர்ச்சியில இருந்து மீளவே இல்லை பாவம்.…

பீதி

  டாக்டர் ஜி.ஜான்சன் நான் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்றபோது விடுமுறையில் சிங்கப்பூர் சென்றேன்.அங்கு அப்பா பாரதிதாசன் தமிழ்ப் பாடசாலையில் ஆசிரியராகப் பணி புரிந்தார். பிரிந்து வந்த பால்ய நண்பர்களுடன் மீண்டும் ஒன்று கூடி…

கலைகள். சமையல்

விஸ்வரூபம் – கலைஞன் எதைச் சொல்வது எதை விடுவது ?

மீண்டும் மீண்டும் கலைஞனின் முன்னுள்ள கேள்வி எதைச் சொல்வது எதை விடுவது என்பது பற்றித்தான். இந்தக் கேள்வி கலைஞனின் முன்னாள் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் முன்னாலும் உள்ளது. ஒரு விமர்சகனின் அணுகுமுறை ஏன் இது…

கவிதைகள்

இடமாற்றம்

_________ கண்களுக்கு எதிரே விரல்களுக்கு இடையே நழுவுகிறது தருணங்கள்   இந்நாட்டு மக்களின் மெல்லிய சிரிப்பை அதிராத பேச்சுக்களை கலைந்திராத தெருக்களை நேர்த்தியான தோட்டங்களை   வாரிச் சுருட்டி வெண் கம்பளத்தில் அடுக்கி அணைத்தபடி…

யாதுமாகி….,

ஜெயானந்தன். எல்லாமாய் நின்றேன் எனக்கு பசி கிடையாது எனக்கு ஆசை கிடையாது. மோகம் கிடையாது, காமம் கிடையாது. யாருமற்ற அநாதையாய் வானாந்தரத்தில் நின்றேன். மீண்டும் மீண்டும் சூரியனும், சந்திரனும் காற்றும் மழையும், புயழும், பூகம்முமாய்…

வால்ட் விட்மன் வசனக் கவிதை -25 என்னைப் பற்றிய பாடல் – 19 (Song of Myself) தீயணைப்பாளி நான் .. !

(Song of Myself) தீயணைப்பாளி நான் .. !    (1819-1892) (புல்லின் இலைகள் -1)   மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா     நானொரு விடுதலைக் கூட்டாளி …

மீள்தலின் பாடல்

  ஓய்வுகளின்றி ஓடித்திரிந்த உடல் தொய்வுகளேதுமின்றி எழுதிவந்த விரல்கள் வெளியெங்கும் புன்னகையை விதைக்கும் இதழ்களோடும் விழிகளோடும் சேர்ந்தெப்பொழுதும் மூடியே இருந்தன இரவு பகல் காலநிலையென மாறும் காலக்கணக்குகளறியாது ஆஸ்பத்திரிக்கட்டிலில் மயங்கிக்கிடந்தேன் ஓயாத பேச்சுக்குள் சிக்கித்தவித்த…

தாகூரின் கீதப் பாமாலை – 66 பிரியும் வேளையில் நீ சொல்லி விடு .. !

தாகூரின் கீதப் பாமாலை – 66     பிரியும் வேளையில் நீ சொல்லி விடு  .. !         மூலம் : இரவீந்தரநாத் தாகூர்   தமிழாக்கம் :…

ஒலியின் க‌ல்வெட்டுக‌ள்

  (இன்னிசைச்செல்வ‌ர் டி.எம்.ஸ் அவ‌ர்க‌ள் ம‌றைவிற்கு அஞ்ச‌லி) குர‌ல் த‌ந்து குரல் மூலம் முக‌ம் த‌ந்து இம்ம‌க்க‌ளை ஆட்சி செய்தீர். முருக‌ன் எனும் உந்து விசை அத்த‌னையும் உன்னிட‌ம் தேனின் ம‌ழை. "அன்ன‌ம் இட்ட‌…

நிறமற்றப் புறவெளி

விழி திறந்த பகலில் மொழி மறந்து மௌனமானாய் இமை மூடிய இரவில் தலைக்கோதி தாலாட்டினாய் நிழல் விழும் தூரத்தில் நீ எனது உறவானாய் தென்றலாய் எனைத் தொட்டு தீண்டும் இன்பம் தந்தாய் இளங்காற்றாய் மாறி…

நாள்குறிப்பு

    அந்த வீட்டைக் கடந்து போக முடியவில்லை மாமரத்தைப் பற்றி விசாரிக்க யேணும் படியேறி விடுகிறேன் மைனாக்களுக்கும் அணில்களுக்கும் அடைக்கலம் தந்த விருட்சம் வேரோடு விழுந்து கிடக்கிறது கொல்லையில் மாமரம் இருக்குல்ல அந்த…

“பொன்னாத்தா”

  எம்புட்டு உசுரு ஓம் மேலெ. ஒனக்கு அது புரியாது. பூப்போட்ட ஏங் கண்டாங்கி பூதோறும் தீப்பிடிக்கும் நான் பொசுங்க‌ பாக்க‌லையா கொண்ட‌யிலெ செருகிவெச்சேன் ச‌ம்ப‌க‌ப்பூங் கோத்தோட‌. ஓ(ன்) நென‌ப்புக் கொத்து தான் என்னெ…