This entry is part 4 of 10 in the series 20 செப்டம்பர் 2026

__________________________

நான்  கட்டுவது  கற்பனைக்  கோட்டை

காற்றுக்கும்  மழைக்கும்  தப்பிக்கும்

கண பெருமூச்சில்  சுக்குநூறாய்  உடைந்து  சிதறும்

மழைத்துளி  விழுந்தது

விழித்தது  உயிர்

உயிருக்குள்  உயிர்  துளிர்த்தது

ஆறுமுகனுக்கு  ஆறு  தலை

இராவணனுக்கு  பத்து  தலை

தீரவில்லை  தமிழனுக்கு  இக்கட்டு  நிலை

கடமையைச்  செய்கிறோம்

பலனை  எதிர்பார்க்கிறோம்

இனியும்  பரிதவிக்க  தயாராயில்லை

அமுது படைப்பவள்  தெய்வம்

அன்பைத்  தருபவள்  தாய்

இரண்டறக்  கலந்து  ஒன்றானவள்  பெண்

அப்பங்களுக்காக  வானத்தைப்  பார்த்துக்  கொண்டிருக்கிறோம்

காடைகளும்  பறந்து  வரவில்லை

பசி  எம்மைத்  தின்று  கொண்டிருக்கிறது

புத்தன்  ஆவது  சுலபம்

சித்தன்  மாறுவது  எளிது

மனிதனாய்  குடும்பஸ்தனாய்  வாழ்வது  கடினம்.

தேக்கம் புலி  தலையில ஆயிரத்தெட்டு  பேனு

நேரியல்  துண்டு  மினுங்க  ஊர்கோலம்  போச்சு

ஆக்கங் கெட்ட  கூகைக்கு  ஆம்பளன்னு  பேரு

நெருப்புன்னா  வாய்  வெந்துருமா?

நீருன்னா  தாகம்  தீந்துருமா?

கோழி  மிதுச்சு  குஞ்சு  செத்துருமா?

சிறகுகள்  துளிர்க்கின்றன

மனதில்  கனவுகள்  திரளுகின்றன

வானம்  விரிந்து  கிடக்கிறது

நுங்கும்  நுரையுமாக   வரும்  புது வெள்ளம்

தங்க  இடமின்றி  பாயும்  கடலினுள்

சங்கொலித்து  அலையும்  ஆண்டிப்பண்டாரம்.

🦀

வசந்ததீபன்

Series Navigationநிழலின் பயம்காலத்தின் கையொப்பம்