அக்கரை…. இச்சை….!

This entry is part 12 of 40 in the series 1 ஏப்ரல் 2012

இனிமேல் இந்தத் திருநெல்வேலி ஊருக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காதோ.? எத்தனை ஆசையோடு வந்தாள் விமலா. உள்ளத்தில் அலைபாயும் ஒரேக் கேள்வியோடு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு மதுரை செல்லும் பஸ்ஸுக்காகக் காத்திருந்தாள் .அவளது நினைவுகள் மேற்கொண்டு நகர மறுத்து நேற்றிரவு நடந்த நிகழ்வையே சுற்றி…சுற்றி.. வந்து கொண்டிருந்தது. தனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல்…சின்ன வயசிலேயே. அப்பாத் தவறிப்போனதால்….அம்மாவின் நிழலிலேயே….வளரும்போது…கூடப் பிறந்த அக்கா கல்பனாதான் ..விமலாவுக்கு எல்லாமே. எந்த ஒரு வெளிக்கவலையும் தெரியவிடாமல் பார்த்துக் கொள்வாள் .கல்பனாவுக்கு […]

விமோசனம்

This entry is part 9 of 40 in the series 1 ஏப்ரல் 2012

அடியே அலமு! மளிகை ஐட்டங்களுக்கு லிஸ்ட் போட்டுட்டியோன்னோ? குடு போய் வந்துட்றேன். அப்புறம் நான் சொல்றாப்பல நடந்துக்கோ.இனிப்புக்கு கேசரி கிளறிடு. போறும். வேலைக்கு சுலுவு. வேணும்னா முந்திரி பருப்பை சித்த உபரியா சேர்த்துக்கோ. பசு நெய்யை தளற வார்த்துக்கோ. .கையிலெடுத்தா நெய் சொட்டணும். “சும்மா படுத்தாதேள்.. நம்மாத்து கொழந்தைகள்னா வர்றது?. கேளுங்கோ! அதிரசம்,பாசந்தி, கைமுறுக்கு, அப்புறம் ‘மலாய்கஜா’ன்னு பால்கோவால ஒரு ஐட்டம் செய்வேனே.போன தடவையே மஞ்சுஆசைப்பட்டா. பதம் இளகலா பிசுபிசுன்னு வரணும். அவளுக்கு சரியாவே வரலியாம்.. வர்றச்சேஒரு […]

மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19

This entry is part 6 of 40 in the series 1 ஏப்ரல் 2012

“தெற்கே அருங்கூர் அருகே கிருஷ்ணபட்டணம் என்ற புதிய நகரமொன்றை ஏற்படுத்தியிருக்கிறோம். அங்கு குடிவரும் மக்களுக்கு விவசாயத்திற்கான நிலமும், குடியிருப்புக்கான மனையும் வழங்கிவருகிறோம். நீங்கள் விரும்பினால் உங்கள் தேவாலயத்தையும், பங்குச் சாமியார்இல்லதையும் அங்கே கூடக் கட்டிக்கொள்ளலாம்.” 21. பிரதானி நந்தகோபால்பிள்ளை உரையாடலை திசை திருப்பும் காரணம் அறியாது பிமெண்ட்டா யோசனையில் மூழ்கினார். இந்துஸ்தானத்திற்கு வந்திருந்த நான்கைந்து மாதங்களிலேயேப அவர் உள்ளூர் மொழிகளைக் கற்றிருந்தார். குறிப்பாக தமிழர்களின் பேச்சுதமிழுக்கும், எழுதும் தமிழுக்குமுள்ள வேறுபாடுகள் இருப்பதை புரிந்துகொண்டார். திருச்சபை ஊழியர்கள், உள்ளூர் […]

பெண்மனம்

This entry is part 2 of 40 in the series 1 ஏப்ரல் 2012

-ஆதிமூலகிருஷ்ணன் பித்துப்பிடிக்கும் நிலையிலிருந்தேன். எப்படித்தான் இந்த பிரச்சினை வந்து உட்கார்ந்துகொள்கிறதோ? கல்யாணம் என்றதுமே கொஞ்சம் அவநம்பிக்கையும், ‘நமக்கா?’ என்ற ஆச்சரியமும் ஏற்படுகிறது. ஆனால் இந்தக் காதலுக்கு மட்டும் இந்தத் துவக்கநிலை பிரச்சினையெல்லாம் இருப்பதில்லை போலும். ’இம்’ என்பதற்குள் தோன்றி இதயம் படபடக்க மிதக்கவைத்துவிடுகிறது. ம்ஹூம்.. எப்படிப்பார்த்தாலும் சாதுவாக இந்தப்பிரச்சினை முடியும் என்று தோன்றவில்லை. நாம்தான் ஏதும் புதுமை பண்ணிப்பார்க்கலாம் என்றால் அதற்கு வாய்ப்பில்லாமல் வீட்டில் ஏதாவது ஒன்று இருந்து தொலைத்துவிடுகிறது. பாருங்கள், என் அண்ணன் நன்றாக சம்பாதிக்கிற […]

விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி ரெண்டு

This entry is part 41 of 42 in the series 25 மார்ச் 2012

1927 ஃபெப்ருவரி 27 அக்ஷய மாசி 15 ஞாயிறு நான். நான் தான். மகாலிங்கய்யன். வரதராஜ ரெட்டி. எவனுமில்லை. ஸ்திரி சம்போகத்திலும், ஜெயிலிலும், பிச்சை எடுப்பதிலும், தெய்வம் தொடங்கி நான் தெண்டனிட வேண்டிய, பிரியம் காட்ட விதிக்கப்பட்ட, இக்கிணியூண்டாவது எனக்கு வேண்டப்பட்டவர்களாக நான் நினைக்கிற மனுஷர்கள் வரை அநேகம் பேருக்குக் கடுதாசி எழுதியும் ஒரு ஜீவிய காலம் முழுசையும் போக்கினவன். இன்னும் இது பாக்கி இருக்கா, எப்போ எப்படி முடியும் என்பதொண்ணும் தெரியாது. தெரிஞ்சு என்ன ஆகப் […]

முன்னணியின் பின்னணிகள் – 33

This entry is part 39 of 42 in the series 25 மார்ச் 2012

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் >>> ”ஒரு விஷயம் கேட்கலாமா, ரோசி?” என்று கேட்டேன். ”அந்தப் புத்தகத்தில் குழந்தையின் மரணத்திற்கப்பாலான சம்பவங்கள், அவை நடந்ததா?” என்னை ஒரு சந்தேகப் பார்வை பார்த்தாள். அவள் அதரங்கள் சுழித்து சின்னப் புன்னகை. ”ம். அதெல்லாம் எத்தனை வருஷத்துக்கு முந்தைய கதை. எனக்கு அதைச் சொல்றதில் எந்த விகல்பமுங் கிடையாது. அவர் அதைச் சரியா யூகிச்சதாச் சொல்ல இயலாது. அது அவரோட கற்பனைதானே? அவருக்கு இதெல்லாம் தெரியும்ன்றதே எனக்கு ஆச்சர்யம். […]

”கீரை வாங்கலியோ…கீராய்…!”

This entry is part 36 of 42 in the series 25 மார்ச் 2012

நீங்களே சொல்லிடுங்கோ… என்றாள் சாந்தி. சொல்லிவிட்டு வாசலுக்கு மறைவாக அந்த நாற்காலியை உள் பக்கமாய் இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். அவருக்கு ரெகுலர் கஸ்டமர் நீ….இப்போ தீடீர்னு என்னை சொல்லச் சொன்னா எப்டி? நீயே சொல்லிடு….அதுதான் சரி…. – நாதன் அவன் அறைக்குள் புகுந்து கொண்டான். சும்மாச் சொல்லுங்க ஒரு நாளைக்கு…பரவாயில்லே… உறாங்…அதெப்படீ? நா அவர்ட்ட இதுநாள் வரை பேசினது கூட இல்லை…முத முதல்ல போய் அவர்ட்ட இதைச் சொல்லச் சொல்றியா? என்னால முடியாது… தெரு ஆரம்பத்தில் […]

ரஸ்கோல்நிக்கோவ்

This entry is part 32 of 42 in the series 25 மார்ச் 2012

நிர்மல் சிறு வயதிலிருந்தே தொடர்ந்து வரும் சுபாவமாதலால் காரணமெல்லாம் தெரியாது. எப்போதாவது பொது இடத்தில், பின்னிருந்து யாராவது தன் பெயரைச் சொல்லி அழைத்தால், திக்கென்றிருக்கும் அவனுக்கு. யாரென்று திரும்பிப் பார்த்தால் யாராவது நண்பர்களாகத் தானிருக்கும். அவ்வளவு ஏன், தெருவில் யாரோ யாரையோ ‘ஏய்!’ என்று ஒரு குரல் கொடுத்தால் போதும். தன்னைத் தான் கூப்பிடுகிறார்களோ என்று பயம் சூழ்ந்து கொள்ளும். பின்னால் திரும்பிப் பார்க்கவே அச்சப்படுவான். அன்று அப்படி யாரும் அவனை அழைக்கவில்லை. ஆனாலும் நடப்பவை வழமைக்கு […]

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -18

This entry is part 28 of 42 in the series 25 மார்ச் 2012

20. சாளரத்தின் வழியே பகற்பொழுதின் ஒரு துண்டு பிமெண்ட்டா அறையிலும் கிடந்தது. குளிர்ந்த காற்று சலசலவென்று காதருகே சலங்கைபோல ஒலித்துக் கடந்தது. அக்காற்றுடன் மைனாக்களின் கீச்சு கீச்சும், ஒன்றிரண்டு காகங்களின் கரைதலும், இரட்டை வால் குருவியின் கிக் -கிக்கும், குயிலொன்றின் குக்கூ அக்கோவும் கலந்திருந்தன. மீட்பரின் குரல்போல அவை பேசின. அறையில் தளும்பிக்கொண்டிருந்த குளிர்காற்றில் சிறிது நேரம் அசையாமற் கிடந்தார். எத்தனை சுகமான அனுபவம். எட்டுமணி நேரத்திற்கு முன்பு எரிமலைக்கருகில் கிடத்தியதுப்போலவிருந்தது. இப்போதோ நேற்றைய மனநிலை இல்லை. […]

சொல்லாமல் போனது

This entry is part 24 of 42 in the series 25 மார்ச் 2012

நளினி அம்மா சற்று அதிர அதிரத்தான் நடப்பாள். பெரிய சரீரம். சாரீரமும் கனம்தான். அதட்டலான குரலில் ” ஏய் சிறுக்கி ! எதையும் தொடாம சும்மா ஒக்கார்ந்திருக்க மாட்டியா ? இந்த ஆம்பிளப்புள்ள ஒக்கார்ந்த்திருக்கல ? ” என்று என்னை ஒப்பிட்டு எப்போதாவது அவள் அசந்திருக்கும்போதோ அந்தப் பக்கம் இந்தப் பக்கம் போயிருக்கும்போதோ எதையாவது எடுத்துத் தின்றுவிடும் வலது பக்க வீட்டுப் பெண் சகுந்தலாவையோ அல்லது என்னையும் சகுந்தலாவையும்விட பெரியவளான வயதில் பெரிய, என் பெரிய சகோதரிகளையொத்த […]