வசந்ததீபன்
சுவர்களால் ஆனதல்ல வீடு
இதயங்களலானது
அன்பின் மெல்லிய இழைகளானது
துண்டு மேகமே இரக்கமற்று எம்மைக் கடக்காதே
கொஞ்சம் உன் கருணையைச் சிந்தி விட்டுப் போ
கருகிக்கிடக்கும் நாங்கள் தளிர்க்க தயவு காட்டு
இச்சிமரம் காற்றில் யட்சியாய் ஆடுகிறது
பிச்சிப்பூக்களின் மணம் நெஞ்சைப் பிடித்தாட்டுகிறது
நஞ்சைத் தின்றவனாய் நானும் கண்கள் சொருகக் கிடக்கிறேன்
கண்ணீர் மழையில் நனைந்தேன்
கவிதைத் தெருவில் அலைந்தேன்
காலமெல்லாம் தடுமாறி
வேதனையில் விழுகுகிறேன்
தண்டவாளங்களின் மேல் ரயில் ஓடுகிறது
காலத்தின் மீது வாழ்க்கை விரைகிறது வெற்றிடத்தின் மேல் சவாரி செய்தபடி நான் போகிறேன்.
வசந்ததீபன்