ஒருகோப்பைத்தேநீர்

This entry is part 5 of 44 in the series 16 அக்டோபர் 2011

கண்ணாடிப்பேழையில் உறங்கும் புத்தர் சற்று நேரத்தில்விழித்து எழக்கூடும். அதற்க்குள் தயாரிக்க வேண்டும் அவர் அருந்த ஒருகோப்பைத்தேநீர். RAVIUTHAYAN raviuthayan@gmail.com

கையாளுமை

This entry is part 41 of 45 in the series 9 அக்டோபர் 2011

காட்சி ஒன்று .. மறுத்து பேசும் பிள்ளைகளிடம் மன்றாடி மனு போட்டு, மாறுவேடம் தரித்து பயமுறுத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டு காட்சி இரண்டு .. உம்மென்றால் உம்மனாமூஞ்சிகளாகி, ஏனென்றால் எரிமலையாய் எழும் வயதான வீட்டு பெரியவர்கள் மனம் கோணாமலிருக்க கோணாங்கியாகி .. காட்சி மூன்று ..நான்கிலும் ஏதோவொரு உத்தியை கையாண்டதில் மான,ரோஷம்,வெட்கம் சூடு, சொரனை யாவும் இப்போது அஞ்சறை பெட்டியில்.. தாளிதத்திற்கு மட்டும் – சித்ரா (k_chithra@yahoo.com)

இரு கவிதைகள்

This entry is part 39 of 45 in the series 9 அக்டோபர் 2011

  அகதிக்  காகம்                                           – பத்மநாபபுரம் அரவிந்தன் –   நீண்டதோர் கடற்  பயணத்தின் மூன்றாம் நாள் அதிகாலை கண்ணில்ப் பட்டது முன்புறக் கொடிமர உச்சியில் அமர்ந்திருந்த அக்காகம் ..   சில நூறு மைல்கள் கரையே இல்லாப் பெருங் கடல் நடுவே எப்படி வந்ததோ, கண்டம் கடக்கும் பறவைகள் பலவும் ஓய்வெடுக்க வந்திருந்து மீண்டும் போகும்.. காகங்கள் பொதுவாக  இத்தனை தூரம் பார்ப்பதே இல்லை.. இக்காகம் வழி தவறிப் பெருங் காற்றில் அடித்துவரப் பட்டிருக்கலாம்..    தொலை பயணக் கப்பல்கள்  ஓவ்வொன்றாய்  அமர்ந்தமர்ந்து வந்திருக்கலாம்.. எம்பிப் பறக்க எத்தனித்து பெருங் காற்றின் வேக வீச்சில் தடுமாறித் தத்தளித்து மீண்டுமது கப்பல் தளத்தினில் வந்தமரும்   தட்டில் அரிசி, கடலை, மாமிசத் துண்டுகள்  கிண்ணத்தில் தண்ணீரும் கொண்டுவந்து தளத்தில் வைத்து தள்ளி நின்றுப் பார்த்திருந்தேன்..   ‘ காகமே ஆனாலும் அது நம் நாட்டுக் காகமன்றோ? ‘   இன்னமும் இருக்கிறது நான்கு நாட்கள்    தொடர் கடற்  பயணம்.. காற்றில்லா நேரத்தில்    சிறிது தூரம் பறந்து விட்டு   வந்தமர்ந்து ஓய்வெடுக்கும்..    சென்னை – ஆஸ்திரேலியா விசாவின்றி வந்தடைந்து    கரைகண்டக் களிப்பினில்   வேகமாய் எம்பி சுய குரலில்க்   கத்திவிட்டு கரை நோக்கிப்    பறந்ததது, மறுநாள்….    உடலெங்கும் கொத்துக் காயங்களுடன்    கப்பல்த் தளத்திலது ஓரமாய் ஒளிந்தபடி […]

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) மரக்கோடரி ( புதையல் தோண்டுதல்) (கவிதை -51 பாகம் -1)

This entry is part 37 of 45 in the series 9 அக்டோபர் 2011

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா யாரிந்த மாறுதல் செய்பவர் ? எவரிந்த மாறுதலைப் புரிபவர் ? இடது பக்கம் எய்த அம்பு வலது பக்கம் விழுந்தது ! மானை விரட்டிச் செல்லும் போது காட்டுப் பன்றி என்னைத் துரத்திக் கொண்டு வரும் ! சுயத் தேவைக்கு நான் சூழ்ச்சி செய்தேன் ! சிறையில் தள்ளப் பட்டேன் இறுதியில் ! பிறருக்குத் தோண்டிய குழியில் நான் தவறி விழுந்தேன் ! […]

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 49 பாகம் -2)

This entry is part 36 of 45 in the series 9 அக்டோபர் 2011

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “சகோதரர்களே ! ஒருவருக் கொருவர் போதனை கூறிக் கொள்வீர். அதுவே உமக்கு பிழைகளைத் திருத்தவும், வீணான மன நோவைத் தவிர்க்கவும் வழி வகுக்கும். பலரின் அனுபவ ஞானமே சித்திரவதைக்கு எதிரான ஒரு கவசம் உமக்கு ! அம்முறைப்பாடு நமது எதிரிகளைக் குறைக்கும்” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ காதல் என்பது என்ன ? காதல் என்பது கவிஞனுக்குப் பெருமித உணர்ச்சி ! […]

நிலாவும் குதிரையும்

This entry is part 35 of 45 in the series 9 அக்டோபர் 2011

குமரி எஸ். நீலகண்டன்   பரந்த பசும் வெளியில் பாய்ந்து சென்றது ஒரு குதிரை தன்னந்தனியாய்.   ஆடுகள் மாடுகள் ஆங்காங்கு மேய்ந்திருக்க இறுமாப்புடன் வானம் நோக்கியது.   வட்ட நிலாவைக் கண்டு அழகிய இளவரசி தன்மேல் சவாரி செய்வதாய் நினைத்துக் கொண்டது.   முதுகில் இருப்பதாய் கூடத் தெரியவில்லை… எவ்வளவு மெல்லிய உடலுடன் என் மேல் சவாரி செய்கிறாளென இன்னும் குதூகலமாய் குதித்து குதித்து பறந்தது.   அங்கே ஒரு அழகிய தாமரைக் குளம் வந்தது. […]

சிற்சில

This entry is part 33 of 45 in the series 9 அக்டோபர் 2011

சிற்சில சொல்லாடல்கள் பிரித்து அறியப்படாமலே  வாதங்கள் என மேல்போர்வை கொண்டு ஆழங்களில் சிக்கித்தவிக்கின்றன .. மீட்சி என்னும் சொல்லறியா அவை தனக்குள் முடங்கி  “தான் ” விடுத்து.. தர்க்கத்தில் கலந்து பிணைந்து  பின்னர் தானாய் கரைந்தும் விடுகின்றன அவைகளுள் சிலவோ நீரினடியில் வேர் பிடித்து தண்டின் வழி உண்டு எங்காவது  மலர சேற்றின் அடியில் இன்னும் சிக்கி மூச்சடக்கி கிடக்கின்றன அந்த பள்ளங்களில் நீர் வற்றும் வரை … ஷம்மி முத்துவேல்

கொக்கும் மீனும்..

This entry is part 30 of 45 in the series 9 அக்டோபர் 2011

  கால்வலி கண்டதுதான் மிச்சம்- கொக்குக்கு.. ஓடையில் வரவில்லை ஒரு மீனும்.. வரும் மீனையெல்லாம் வலைபோட்டுத் தடுத்துவிட்டான் குத்தகைதாரன்.. கண்மாய் மீன்களுக்குக் கரைகாணா சந்தேஷம்- இரை கிடைக்கிறதாம் இலவசமாக.. மொத்தமாய் இரையாகப் போவது இப்போது தெரியாது.. இதுதான் இப்போது அரசியலோ.. அப்படியெனில், கொக்கும் மீனும் நாம் தான் !        -செண்பக ஜெகதீசன்..

துளிப்பாக்கள் (ஹைக்கூ)

This entry is part 29 of 45 in the series 9 அக்டோபர் 2011

சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது – தாயின் தியாகம் ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி மானம் காப்பதும் மானமிழந்தால் கோர்ப்பதும் – ஒன்றே முடிச்சு மணந்தால் மறப்பதும் மணக்காவிடில் மறக்காததும்- அதே காதல் உணவின் முடிவு மறுவுலகின் துவக்கம் – அதுவே மரணம் ஊரை இணைப்பதும் ஊரைப் பிரிப்பதும் – அதே தெருக்கள் பிறரைக் காப்பதால் தன்னைக் காப்பது – அதே தர்மம் குழந்தைக்கு வந்து பொம்மை நிறுத்தியதும் பெரியதாய் வளர்ந்ததும் […]

நாயுடு மெஸ்

This entry is part 27 of 45 in the series 9 அக்டோபர் 2011

    தண்ணி யடிசசு வந்தா தடாவாமே அண்ணாச்சி பாக்கிவச்சார் ஆகாரம் மண்ணாச்சு போய்யா அதுகிடக்கு பாயா கவிச்சிதுண்ண நாயுடு மெஸ்படி ஏறு..   வாசல் எருமைங்க வால்தூக்கு தேவிலகு ஏசாதே நீமெர்சல் ஆவாதே – ராசால்லே ஓரமாய் ஆம்லெட்மேல் ஓடுதுபார் மாட்டுஈ காரம்போர்ட் காய்கணக்கா சுண்டு.   ஈமூ கறி’பா எடுத்து ருசிபாரு ஏமி முளிக்கறே ஏனத்தக் காமி தயிர்வடை ஓணும்னு தம்பிவந்து நிக்கறான் அய்ர்ர்வூட்டுப் புள்ள அனுப்பு.   (ஈமு Emu – நெருப்புக்கோழி […]